தமிழ்நாடு

காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது.. போலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை காதலிக்ககூறி மிரட்டிய இளைஞரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது.. போலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 24ம் தேதி மாணவி தனியாக நடந்து சென்றபோது, கீழ்விலாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகனான 23 வயதாகும் இளைஞர் திருமலை சிறுமியை வழிமறித்து வம்பிழுத்துள்ளார்.

மேலும், தன்னை காதலிக்கக்கூறி கட்டாயப்படுத்தியுள்ளார். அதோடு இல்லாமல், தன்னைக் காதலிக்கவில்லை என்றால், கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுகொண்ட போலிஸார், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து, சிறுமிக்குக் காதல் தொல்லைக் கொடுத்த இளைஞர் திருமலையைக் கைது செய்து விசாரித்து வருகிறார்.

banner

Related Stories

Related Stories