தமிழ்நாடு

“ஒரே நாளில் நடந்த துயரம்” : தந்தை இறந்த அதிர்ச்சியில் நெஞ்சு வலி ஏற்பட்டு மகனும் பலி.. உறவினர்கள் சோகம்!

தந்தை இறந்த அதிர்ச்சியில் மகனும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திருவண்ணாமலையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“ஒரே நாளில் நடந்த துயரம்” : தந்தை இறந்த அதிர்ச்சியில் நெஞ்சு வலி ஏற்பட்டு மகனும் பலி.. உறவினர்கள் சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவண்ணாமலை மாவட்டம், கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் நாராயண மூர்த்தி. இவருக்குத் திருமணமாகி ரஞ்சித் பிரியா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், வயது முதிர்வு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த வடிவேல் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து உறவினர்கள் மகன் நாராயண மூர்த்திக்குத் தகவல் கொடுத்தனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்து வீட்டிற்கு வந்து தந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுதபோது நெஞ்சைப் பிடித்துக் கொண்டே மயங்கி விழுந்தார் நாராயண மூர்த்தி. உடனே அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பின்னர் தந்தை மற்றும் மகனின் உடலை அருகருகே அவரது உறவினர்கள் அடக்கம் செய்தனர். தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories