தமிழ்நாடு

இதுவரையில் இல்லாத அளவில் வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கீடு : அடுத்த கட்டத்திற்கு செல்லும் தமிழ்நாடு!

வேளாண்மை துறைக்கு மொத்தமாக ரூ.33,007.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில் இல்லாத அளவில் வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கீடு :   அடுத்த கட்டத்திற்கு செல்லும் தமிழ்நாடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பெறுப்பேற்ற உடன் தமிழ்நாடு வரலாற்றிலேயே வேளாண்துறைக்கு கடந்தாண்டு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டாவது முறையாக மீண்டும் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022 -23ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் :-

* சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க திட்டங்களை அரசு செயல்படுத்தும்.

* பயிர்க்காப்பீடு திட்டத்திற்கு பட்ஜெட்டில் மாநில அரசின் பங்காக ரூ.2,339 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 9.26 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடாக ரூ.2,055 கோடி வழங்கப்பட்டுள்ளது.

* 7,500 ஏக்கரில் இயற்கை வேளாண் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.

* மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் ரூ.71 கோடியில் புதிதாக செயல்படுத்தப்படும்.

* நெல் ஜெயராமன் பெயரில் 200 ஏக்கரில் பாரம்பரிய நெல் விதைகளை உற்பத்தி செய்து 20 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

* வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த 200 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க தலா ரூ.1லட்சம் வழங்கப்படும்.

* மரம் வளர்ப்புத் திட்டத்திற்காக வேளாண் பட்ஜெட்டில் ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தரும்புரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் துவரை உற்பத்தி மண்டலங்கள் அமைக்கப்படும்.

* மாவட்ட, மாநில அளவில் சிறுதானிய திருவிழா நடத்தப்படும்.

* இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 2 மண்டலங்கள் உருவாக்கப்படும்.

* தஞ்சை, சேலம், திருவள்ளூர், நெல்லை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சோயா பீன்ஸ் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* மயிலாடுதுறையில் ரூ.75 லட்சத்தில் மண் பரிசோதனைக்கூடம் அமைக்கப்படும்.

* ஆதி திராவிட விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் வழங்கப்படும்.

* கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு 195 ரூபாய் உயர்த்திதரப்படும்.

* கரும்பு சாகுபடி ஊக்குவிப்புக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தனியார் பங்களிப்புடன் தேனி, கோவை, கன்னியாகுமரியில் மொத்த காய்கறி விற்பனை வளாகங்கள் அமைக்கப்படும்.

* தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க டான்ஜட்கோவிற்கு ரூ.5,157.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூ.1245.65 கோடியில் பண்ணைக்குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் தூர்வாரும் பணிகள் நடைபெறும்.

* விவசாயிகள் இடுபொருட்களை எடுத்துச்செல்லவும், விளைபொருட்களை சந்தைக்கு எடுத்த செல்லவும் கிராம பஞ்சாயத்துகளில் ரூ.604.73 கோடி செலவில் 2,750 கி.மீ நீளத்தில் சாலைகள் அமைக்கப்படும்.

* வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் குழுக்கள், உற்பத்தியாளர்கள் குழுக்கள் மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை உருவாக்க ரூ.30.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சிறு, குறு, நடுத்தர தொழில்கள் (MSME) மூலம் சிறிய விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்க ரூ.1.5 கோடி வரை மூலதன மானியம்.

* வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம வங்கிகள் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ரூ.1,83,425 கோடி வேளாண் கடன் வழங்கப்படுவதைக் கண்காணித்தல்.

* வேளாண்மை துறைக்கு மொத்தமாக ரூ.33,007.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories