தமிழ்நாடு

“காதலனுக்கு தோசம்.. என் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவு” : கடிதம் எழுதி வைத்துவிட்டு காதலி தற்கொலை!

இளம் பெண் ஒருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“காதலனுக்கு தோசம்.. என் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவு” : கடிதம் எழுதி வைத்துவிட்டு காதலி தற்கொலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவை மாவட்டம், சிக்கராயன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் மாலதி. இவர் கார் ஓட்டுநர் பார்த்திபன் என்பவரை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். பின்னர் நில நாட்களிலேயே அவரது பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், திடீரென பார்த்திபனுக்குச் சிறுநீரகம் பாதிப்படைந்துள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக சில நாட்களாக அவரது மனை மாலதி மனவேதனையுடன் இருந்துள்ளார்.

இதையடுத்து சம்பவத்தன்று, காளியண்ணபுதூரில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனை அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தபோது இறப்பதற்கு முன்பு மாலதி எழுதிய கடிதம் ஒன்று போலிஸாருக்கு கிடைத்துள்ளது. அதில், “எனது முடிவுக்கு வேறு யாரும் காரணமில்லை. நான் எடுத்த முடிவுதான் இது.

காதலனுக்கு தோஷம் இருக்கிறது. அவனைத் திருமணம் செய்ய வேண்டாம் என எல்லோரும் கூறினர். ஆனால் நான் காதலரையே கரம் பிடித்தேன். நான் வாழ்க்கையில் எடுத்த தவறான முடிவு. எனது கணவர் படும் கஷ்டத்தை என்னால் பார்க்க முடியவில்லை.

வாழும் போது நான் யாருக்கும் உதவியாக இருக்கவில்லை. சாகும்போதாவது யாருக்காச்சும் உதவியா இருக்க ஆசைப்படுகிறேன். இதனால் எனது உடல் உறுப்புகளைத் தானமாகக் கொடுத்து விடுங்கள்” என தெரிவித்துள்ளதாக போலிஸார் கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories