தமிழ்நாடு

”கோட்சேவே 14 வருஷத்துல வெளியே வந்துட்டாரு” - பேரறிவாளன் வழக்கு விசாரணையின் போது நடந்த காரசார வாதம்!

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினால் போதுமானது என்று தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

”கோட்சேவே 14 வருஷத்துல வெளியே வந்துட்டாரு” - பேரறிவாளன் வழக்கு விசாரணையின் போது நடந்த காரசார வாதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

அதில் சிலர் பரோலில் வெளியே வந்து சென்றனர். இந்நிலையில், தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது. இந்த பரோல் 9 மாதங்களை கடந்து தொடர்ந்து வருகிறது.

பரோலுக்கு சில கட்டுப்பாடுகள் இருப்பதால், சுதந்திரமாக வெளியே செல்ல முடியவில்லை. அதனால் தனக்கு ஜாமின் வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார்.

அவரது மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர்கள், ராகேஷ் திவேதி, அரிஸ்டாடில் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி வாதிடும் போது, இந்திய தண்ணை சட்டம் 302 மாநில அரசின் பொது அமைதிக்கு கீழ் வருகிறது. எனவே, அது மாநில அரசின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. இந்த வழக்கில் பேரறிவாளனை விடுவிக்க மாநில அரசு முடிவு எடுக்க முழு அதிகாரம் உள்ளது.

அரசியல் சாசன பிரிவு 161ன்படி ஆயுள் தண்டணை விதிக்கப்பட்ட கொலை வழக்கில் ஒருவரை விடுதலை செய்வது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கே உள்ளது. சட்டமன்றத்தின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் போதுமானது. அவர் புதிய முடிவு எடுக்கத் தேவை இல்லை. அரசு முடிவை குடியரசு தலைவருக்கு அனுப்ப தேவை இல்லை என்று வாதிட்டார். அது தொடர்பாக சில உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டினர்.

மேலும், பேரறிவாளன் 32 ஆண்டுகள் சிறையில் இருக்கிறார் என்பதை எடுத்துரைத்த அவர், தேச தந்தையை கொலை செய்த கோட்சே கூட 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டார் என்று குறிப்பிட்டார்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு நீதிமன்றம் உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று வாதிட்டார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பேரறிவாளனை ஜாமினில் விடுதலை செய்து உத்தரவிட்டனர். அப்போது ஒன்றிய அரசின் கூடுதல் சோலிசிட்டர், பேரறிவாளன் மாதம் இரண்டு முறை சென்னையில் சி.பி.ஐ அதிகாரி முன்பாக ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை விதிக்க வேண்டும் என்றார்.

அது தேவை இல்லை என்று தெரிவித்த தமிழ்நாடு அரசு வழக்கறிஞர், பேரறிவாளன் தங்கியுள்ள ஜோலார்பேட்டை காவல் நிலையத்திலேயே கையெழுத்திட்டால் போதுமானது என்று தெரிவித்தார். அதனை ஏற்றுக் கொண்டு நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

banner

Related Stories

Related Stories