சென்னை ஆவடி அருகே உள்ள கொரட்டூர் சாலை அருகே ஆவடி காவல்துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 2.45 மணியளவில் அவ்வழியாக காரில் வந்த இரண்டு பேர் சண்டை போட்டுக்கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்ததுள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையில் ஈடுபட்டதில், ரகளை செய்தது சியாமளா பெட்ரோல் பங்க் உரிமையாளரின் மகன்கள் தீபக் ராஜ் (வயது 21) , ஜீவத் ராஜ் (19) எனத் தெரியவந்தது.
முன்னதாக விசாரிக்கச் சென்ற காவலர் ஆகாஷ் பாபுவை அண்ணன் தம்பி இரண்டு பேரும் தாக்கியதாகக் தெரியவந்தது. இதனையடுத்து இரண்டு பேரையும் கைது செய்து புழல் சிறையில் போலிஸார் அடைத்துள்ளனர்.