தமிழ்நாடு

ரூ.10 ஆயிரம் கேட்ட மகன்.. பெற்றோர் தரமறுத்ததால் விபரீத முடிவெடுத்த வாலிபர்!

ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்குப் பெற்றோர் பணம் தராததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.10 ஆயிரம் கேட்ட மகன்.. பெற்றோர் தரமறுத்ததால் விபரீத முடிவெடுத்த வாலிபர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி கீதா. இந்தத் தம்பதிக்கு விக்னேஷ், பிரகாஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் பட்டதாரியான விக்கேன்ஷ வேலை தேடிவந்துள்ளார். மேலும் தனது தந்தைக்கு உதவியாக சென்டிரிங் வேலை செய்து வந்துள்ளார். அதேபோல் பெற்றோர்களிடம் வேலைக்கு இன்டர்வியூ செல்வதாகக் கூறி பணம் வாங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 25ம் தேதி ரூ.10 ஆயிரம் பணம் வேண்டும் என பெற்றோரிடம் கேட்டுள்ளார். இதற்கு அவர்கள் தரமறுத்ததுடன், ஒழுங்காக வேலைக்குபோ என திட்டியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த விக்னேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது பற்றி தகவல் அறிந்த வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ரூ.10 ஆயிரம் கேட்ட மகன்.. பெற்றோர் தரமறுத்ததால் விபரீத முடிவெடுத்த வாலிபர்!

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில்,விக்னேஷ் சில ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாக இருந்தது தெரியவந்துள்ளது. இந்த விளையாட்டில் ரூ. 3 லட்சம் வரை இழந்துள்ளார். இந்நிலையில்தான் பணம் கேட்டுப் பெற்றோர்கள் தரமறுத்தால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories