தமிழ்நாடு

“டாக்டர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு 280 பவுன் நகை கொள்ளை.. முகமூடி கும்பல் கைவரிசை” : நடந்தது என்ன?

மருத்துவர் வீட்டில் 280 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“டாக்டர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு 280 பவுன் நகை கொள்ளை.. முகமூடி கும்பல் கைவரிசை” : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் - தாராபுரம் புறவழிச் சாலையில் வசித்து வருகிறார் மருத்துவர் சக்திவேல். இந்நிலையில், இன்று முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த சக்திவேல், மனைவி ராணி, சக்திவேலின் தந்தை சென்னியப்பன், தாய் தேவநாயகம் ஆகியோரை முகமூடி அணிந்த கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளது.

பின்னர் அவர்கள் நான்கு பேரையும் அந்த கும்பல் கட்டிப்போடு, வீட்டின் பீரோவில் இருந்த ரூ.25 பவுன் தங்கை நகைகள் மற்றும் ரூ. 25 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துள்ளது. பின்னர் வீட்டின் வெளியே நின்றிருந்த காரை எடுத்து கொண்டு முகமூடி கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பம் குறித்து அறிந்த போலிஸார் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து முகமூடி கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர். முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மருத்துவர் வீட்டிற்குள் புகுந்து 280 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories