தமிழ்நாடு

கண்முன்னே திருடுபோன சைக்கிள்.. மீட்டு கொடுத்த போலிஸ்: நெகிழ்ச்சியடைந்த சிறுவன்!

திருடுபோன சைக்கிளை போலிஸார் மீட்டு சிறுவனிடம் ஒப்படைத்தனர்.

கண்முன்னே திருடுபோன சைக்கிள்.. மீட்டு கொடுத்த போலிஸ்: நெகிழ்ச்சியடைந்த சிறுவன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை புரசைவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் கிரிஷ். சிறுவனான இவர் கடந்த 3ம் தேதி இரவு தனது குடியிருப்பு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கிரிஷின் சைக்கிளைத் திருடிச் சென்றுள்ளார். இதைப்பார்த்த சிறுவன் அவரை துரத்திச் சென்று பிடிக்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் அவர் வேகமாகச் சைக்கிளை ஓட்டி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

பின்னர், சிறுவன் கிரிஷ் போலிஸாரிடம் புகார் அளித்தார். இதன்பேரில் போலிஸார் வழக்க பதிவு செய்து அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

கண்முன்னே திருடுபோன சைக்கிள்.. மீட்டு கொடுத்த போலிஸ்: நெகிழ்ச்சியடைந்த சிறுவன்!

இதையடுத்து சைக்கிளை திருடிச் சென்றது மாங்காடு பகுதியைச் சேர்ந்த அஸ்ரர் என்ற வாலிபர் என்பது தெரிந்தது. பின்னர் போலிஸார் வாலிபரைக் கைது செய்து அவரிடம் இருந்த சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

பின்னர், கீழ்ப்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் கார்த்திகேயன் நேரடியாகச் சிறுவன் வீட்டிற்குச் சென்று மீட்கப்பட்ட சைக்கிளை அவரிடம் ஒப்படைத்தார். இதைக் கண்டு சிறுவன் நெகிழ்ச்சியடைந்து போலிஸாருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories