தமிழ்நாடு

Budget2022 : ’ஒரே நாடு’ கொள்கையை விடாத பாஜக; சாமானியனுக்கு ஜீரோ.. கார்ப்பரேட்டுக்கு ஹீரோவா?

200 டிவி சேனல்கள் மூலம் மாநில மொழிகளிலேயே பாடங்கள் நடத்தப்படும் என பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Budget2022 : ’ஒரே நாடு’ கொள்கையை விடாத பாஜக; சாமானியனுக்கு ஜீரோ.. கார்ப்பரேட்டுக்கு ஹீரோவா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2022-2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையை நாடாளுமன்றத்தில் காலை 11 மணியளவில் வாசிக்க தொடங்கிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 12.30 மணியளவில் உரையை முடித்தார்.

நிர்மலா சீதாராமனின் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் உரையின் விவரம் பின்வருமாறு:-

  • நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

  • 5 ஆண்டுகளில் 60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

  • ஏர் இந்தியா நிறுவனம் முழுமையாக தனியார் மயமாக்கப்பட்டுள்ளது.

  • அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.

  • நாடு முழுவதும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

  • ரயில்வே உதவியுடன் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  • கிராமப்புற மற்றும் மலைவாழ் மாணவர்களுக்கு PM E-Vidhya திட்டம் வழியாக 200 டிவி சேனல்கள் மூலம் மாநில மொழிகளிலேயே பாடங்கள் நடத்தப்படும்.

  • டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும். ஒன்றிய அரசு சார்பில் க்ரிப்டோகரன்சி அறிமுகப்படுத்தப்படும்; டிஜிட்டல் பொருளாதாரத்தில் இது புதிய எழுச்சியாக இருக்கும்.

  • 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் மின்னணு முறையில் இணைக்கப்பட்டு, பணப் பரிமாற்றத்திற்கு உதவும் வகையில் மேம்படுத்தப்படும்.

  • மின்சார வாகனங்களுக்காக ஊரகப்பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். இந்தியா அம்ருத காலத்தில் நுழைந்துள்ளது.

  • நாடு முழுவதும் விரைவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படும்.

  • டிஜிட்டல் பரிவர்த்தனை நாட்டின் எல்லா மூலைகளுக்கும் செல்ல வேண்டும்.

  • 1.5 லட்ச தபால் நிலையங்களில் வங்கி சேவைகள் வழங்கப்பட்டுள்ளன; தபால் நிலைய சேமிப்பு கணக்கிலிருந்து வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பும் வசதி விவசாயிகளுக்கு பெருமளவில் உதவியுள்ளது.

  • நகர திட்டமிடலுக்கு உயர்மட்டக்குழு அமைக்கப்படும்.

  • ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க அனுமதி.

  • 2030ம் ஆண்டுக்குள் 280 ஜிகா வாட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் தயாரிக்க இலக்கு நிர்ணயம்.

  • சூரிய ஒளி மின்சார தயாரிப்பு பொருள்களை உருவாக்குவதற்காக 19,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

  • இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒலி, ஒளி, வரைகலை சார்ந்த பணிகள் ஊக்குவிக்கப்படும்.

  • பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்க அனைத்து அமைச்சகங்களும் பயன்படுத்தும் வகையில் ஆன்லைன் பணம் செலுத்தும் திட்டம் தொடங்கப்படும்.

  • பாதுகாப்புத் துறைக்கான இறக்குமதி குறைக்கப்படும்.

  • One Nation One Registration நிலப்பதிவிற்காக ஒரே நாடு ஒரே பதிவுமுறையின் மூலம் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் பத்திரப்பதிவுகளை மேற்கொள்ளும் முறையை கொண்டு வர முடிவு.

  • அரசின் மூலதன செலவுகள் ₹ 7.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும்.

  • பொருளாதார வளர்ச்சிக்கு தனியாரின் பங்கீடு மூலதனமாக உள்ளது.

  • பெரு நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 12-ல் இருந்து 7% ஆக குறைப்பு.

  • கூட்டுறவு சங்களுக்கான மாற்றுவரி 15% ஆக குறைப்பு.

  • மாநில அரசுகளுக்கு கூடுதலாக ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.

  • எண்ணெய் வித்துகள், சிறு தானியங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம். ரூ.44,000 கோடியில் நீர்ப்பாசன திட்டங்க நிறைவேற்றப்படும்.

  • கோதாவரி-பெண்ணாறு-காவிரி உட்பட 5 நதி இணைப்பு திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.

  • தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை; அது குறித்தான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

banner

Related Stories

Related Stories