தமிழ்நாடு

தமிழுக்கு கலைஞர் ஆட்சி என்ன செய்தது என்று கேட்கும் அறிவிலிகளுக்கான பதில் இதோ..!

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் தமிழுக்கு ஆற்றிய பணிகளைப் பட்டியலிட்டார்.

தமிழுக்கு கலைஞர் ஆட்சி என்ன செய்தது என்று கேட்கும் அறிவிலிகளுக்கான பதில் இதோ..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக்காட்சி வாயிலாக உரையாற்றும்போது, தி.மு.க ஆட்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் தமிழுக்கு ஆற்றிய பணிகளைப் பட்டியலிட்டார்.

* நூற்றாண்டுக் கனவான செம்மொழித் தகுதியை தமிழுக்கு பெற்றுத் தந்தது கலைஞர் ஆட்சி!

* 'மெட்ராஸ்' என்ற பெயரை 'சென்னை' என ஆக்கியது!

* ஶ்ரீ,ஶ்ரீமதி என்ற சொல்லுக்கு பதிலாக திரு, திருமதி என்ற சொல்லை சட்டபூர்வம் ஆக்கியது!

* தலைநகரில் வள்ளுவர் கோட்டமும் கடல் நகரில் 133 அடியில் வள்ளுவர் சிலையும் அமைத்தது!

* திரும்பிய பக்கம் எல்லாம் திருக்குறளைத் தீட்டியது!

* தமிழ் வாழ்க என எழுத வைத்தது!

* சிலம்பின் பெருமையைக் காட்டும் பூம்புகார் கோட்டம் அமைத்தது!

* தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை வழங்கியது!

* ஆட்சிமொழியாய் தமிழை முழுமைப்படுத்தியது!

* தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மூலம் அனைத்துப் பாடங்களையும் தமிழில் மொழிபெயர்த்து 1000க்கும் மேற்பட்ட பாடப்புத்தகங்களை வெளியிட்டது!

* தமிழை கணினி மொழி ஆக்கியது!

* தமிழ் பயிற்று மொழிக்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. இன்று பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை தமிழில் படிக்கலாம்!

* ஆசிரியர்களுக்கு இணையானவர்களாக தமிழாசிரியர்களை ஆக்கியது. தமிழாசிரியர்களும் தலைமையாசியர் ஆகலாம் என உயர்த்தியது!

* உலகம் முழுவதும் தமிழைப் பரப்பியது!

* உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது!

* உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தியது!

* திராவிடப் பல்கலைக் கழகத்துக்கு நிதி வழங்கியது!

* தமிழறிஞர் நூல்களை எல்லாம் நாட்டுடமை ஆக்கியதும், அவர்களது குடும்பத்துக்கு இலட்சக்கணக்கில் நிதி உதவி செய்தது!

* தமிழ்நெட் இணைய மாநாட்டை 1999 இல் நடத்தியது!

* ஓலைச் சுவடி மொழியை அச்சு மொழியாகவும் ஆக்க அடித்தளம் அமைத்தது!

*செம்மொழி உயராய்வு நிறுவனத்தை அமைத்துத் தந்தார் தலைவர் கலைஞர் அவர்கள்.

அத்தகைய தமிழ் அரசை நடத்தியது தான் தி.மு.க அரசு!

அந்த வழியில் இன்றைய அரசும் தமிழரசாக நடந்து வருகிறது.

இவ்வாறு பட்டியலிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories