தமிழ்நாடு

கத்தியால் குத்தி பெற்ற தாயை தீ வைத்துக் கொளுத்திய மகன்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

திண்டுக்கல் மாவட்டத்தில் பெற்ற தாயை தீ வைத்துக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கத்தியால் குத்தி பெற்ற தாயை தீ வைத்துக் கொளுத்திய மகன்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திண்டுக்கல் மாவட்டம், தென்னம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி பஞ்சவர்ணம். இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சதீஷ் லாரி நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இதற்காகச் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இவர் காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.

இதற்கு அவரது தாய் பஞ்சவர்ணம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் தாய் மீது கோபத்தில் இருந்துவந்த சதீஷ் நேற்று இரவு திடீரென பஞ்சவர்ணத்தை கத்தியால் குத்தியுள்ளார். இதில் மயக்கமடைந்து அவர் கீழே விழுந்துள்ளார். பிறகு தாயின் உடலுக்குத் தீவைத்துக் கொளுத்தியுள்ளார்.

பஞ்சவர்ணத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து சதீஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயையே மகன் தீவைத்துக் கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories