தமிழ்நாடு

சாலையில் நிர்வாணமாகத் திரிந்த நபர்.. ஆடை உடுத்தி உணவு ஊட்டிய மனிதி : நெகிழ்ச்சி சம்பவம்!

சாலையில் நிர்வாணமாகத் திரிந்த நபருக்குப் பெண் ஒருவர் இடுப்பில் ஆடை கட்டிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாலையில் நிர்வாணமாகத் திரிந்த நபர்.. ஆடை உடுத்தி உணவு ஊட்டிய மனிதி : நெகிழ்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருநெல்வேலி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் நெல்லை - மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நிர்வாணமாக நடந்து சென்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த நந்தினி உடனே வாகனத்தை நிறுத்தினார்.

பின்னர், இருசக்கர வாகனத்திலிருந்த சால்வை துணியை எடுத்துச் சென்று, அந்த நபரின் இடுப்பில் கட்டிவிட்டார். இதையடுத்து அருகிலிருந்த கடைக்குச் சென்று உணவு வாங்கி வந்து அவரே அந்த நபருக்கு ஊட்டிவிட்டார்.

ஒருவர் அசிங்கமாக இருந்தாலே முகம் சுளிக்கும் இந்த காலத்தில் பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு ஆடை உடுத்த செய்து, உணவு ஊட்டிய மனிதாபிமானத்தை அனைவரும் வெகுவாக விழந்து பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories