தமிழ்நாடு

“ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி” : பயணிகள் கண் முன்னே நடந்த ‘பகீர்’ சம்பவம் !

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடிகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

“ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி” : பயணிகள் கண் முன்னே நடந்த ‘பகீர்’ சம்பவம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார். இவர் சென்னையில் வேலைபார்த்து வந்தார். இவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சரண்யாஸ்ரீ என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் சில நாட்களாகக் காதல் ஜோடிகள் மனமுடைந்து காணப்பட்டுள்ளனர். இதையடுத்து இவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

பின்னர், சென்னை - அரக்கோணம் விரைவு பாதையில் வந்த ரயில் முன்பு பாய்ந்து காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதனைக் கண்ட சில பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளன. பின்னர் இதுகுறித்து ரயில்வே போலிஸாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

பிறகு அங்கு வந்த ரயில்வே போலிஸார் இருவரது சடலத்தையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories