தமிழ்நாடு

ஒமைக்ரான் எதிரொலி; பயணிகள் கவனத்திற்கு.. சோதனைக்காக காத்திருப்போருக்கு ஏற்படுத்தப்பட்ட புதிய வசதிகள் இதோ!

ஒமைக்ரான் பரிசோதனைக்காக காத்திருக்கும் பயணிகளின் காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதோடு, பயணிகளுக்கு கூடுதல் வசதிகளும் சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ளன.

ஒமைக்ரான் எதிரொலி; பயணிகள் கவனத்திற்கு.. சோதனைக்காக காத்திருப்போருக்கு ஏற்படுத்தப்பட்ட புதிய வசதிகள் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் சில மாநிலங்களில் ஒமைக்ரான் பரவத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டிற்குள் ஒமைக்ரான் வைரஸ் நுழையாமல் தடுக்க தமிழக அரசு, விமானநிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இம்மாதம் டிசம்பா் முதல் தேதியிலிருந்து லண்டன், சிங்கப்பூா் என அதிக ரிஸ்க் உள்ள 12 நாடுகள், இத்தாலி, ஜொ்மனி, ரஷ்யா உள்ளிட்ட ரிஸ்க் குறைவாக உள்ள 44 நாடுகளிலிருந்து சென்னைக்கு வரும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் மருத்துவ பரிசோதனை சென்னை விமான நிலையத்திலேயே நடத்துகின்றனா்.

இதில் RT PCR டெஸ்ட் எடுக்கும் பயணிகள் 6லிருந்து 7 மணி வரையிலும், ரேபிட் டெஸ்ட் எடுக்கும் பயணிகள் ஒரு மணி நேரம் வரையிலும் காத்திருக்கும் நிலை இருந்தது. இது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் டெஸ்ட் எடுத்து காத்திருக்கும் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, அவா்கள் காத்திருக்கும் நேரங்களும் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஆா்.டி.பி.சி.ஆா் டெஸ்ட் எடுக்கும் பயணிகளுக்கு 5லிருந்து 6 மணி நேரத்திற்குள்ளும், ரேபிட் டெஸ்ட் எடுக்கும் பயணிகளுக்கு 30லிருந்து 45 நிமிடங்களுக்குள்ளும், மாற்று உள்நாட்டு விமானங்களில் செல்லக்கூடிய டிரான்சிஸ்ட் பயணிகளுக்கு 20 நிமிடங்களிலும் முடிவுகள் வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் எதிரொலி; பயணிகள் கவனத்திற்கு.. சோதனைக்காக காத்திருப்போருக்கு ஏற்படுத்தப்பட்ட புதிய வசதிகள் இதோ!

அதோடு குடியுறிமை, சுங்கச் சோதனை பிரிவுகளில் கூடுதல் கவுண்டா்கள் திறக்கப்பட்டு, பயணிகள் தாமதமில்லாமல் மருத்துவ பரிசோதனை பகுதிக்கு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல மருத்துவ பரிசோதனை முடிந்து காத்திருக்கும் பயணிகள் அமா்ந்திருக்கும் பகுதியில் இருக்கைகள் எண்ணிக்கை 450லிருந்து 500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் காஃபி, ஸ்நாக்ஸ் நியாயமான விலையில் கிடைக்க ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மாா்களுக்கு தனி அறை, வைஃபை, இலவச டெலிபோன் வசதிகள், பொழுபோக்கு சேனல்களுடன் டிவி, விமானங்கள் வருகை, புறப்பாடு டிஸ்பிளே, வெளிநாட்டு பயணங்களை மாற்றுவதற்கான எக்ஸ்சேஞ்ச் கவுண்டா்கள் போன்றவைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு நாளுக்கு 700லிருந்து 800 பயணிகளுக்கு சோதனைகள் நடத்தப்படுகிறது. பயணிகளுக்கு மேலும் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இவ்வாறு சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories