தமிழ்நாடு

“கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு செய்த இளைஞர்” : தேனி மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

திருமண ஆசை கூறி கல்லூரி மாணவியை கடத்திச் சென்று உடலுறவில் ஈடுபட்ட இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

“கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு செய்த இளைஞர்” : தேனி மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த டேனியல் ராஜ். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 17 வயதாகும் கல்லூரி மாணவியிடம் நட்பாக பேசிவந்துள்ளார். இந்நிலையில், திருமண ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து மாணவி கொடுத்தப் புகாரின் பேரில், பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் கடந்த 2019ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், வழக்கு விசாரணை முடிவுற்று இளைஞர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால் இளைஞர் டேனியல் ராஜுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், மூவாயிரம் ரூபாய் அபராதம், அதை கட்ட தவறினால் மேலும் 6 மாத கால மெய்க்காவல் சிறைத்தண்டனையும், மாணவியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக இரண்டு வருடகால சிறை தண்டனையும், 2000 ரூபாய் அபராதம் அதை கட்டத்தவறினால் மேலும் ஆறு மாதகால சிறை தண்டனை விதித்து இன்று தேனி மாவட்டம் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜே வெங்கடேசன் தீர்ப்பு வழங்கி உள்ளார்.

banner

Related Stories

Related Stories