வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்போடு மாநகராட்சியில் கூடுதலாக 200 மருத்துவ முகாம்களை தொடங்குவதன் அடையாளமாக, சென்னை, தேனாம்பேட்டை, ஆஸ்டின் நகரில் மருத்துவ முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் செங்கல்பட்டு மாவட்டம் பள்ளிக்கரணை ரேடியல் ரோடு, நாராயணபுரம் ஏரியில் மேற்கொள்ளப்பட்டுவரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனிடையே ஏரியை பார்வையிடச் செல்லும் வழியில் தேநீர் கடையில் மக்கள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.