தமிழ்நாடு

துப்பாக்கி காட்டி வழிபறியில் ஈடுபட்ட ரவுடி... சுற்றிவளைத்துப் பிடித்த போலிஸ்: நடந்தது என்ன?

மதுரையில் துப்பாக்கி வைத்து மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடியை போலிஸார் கைது செய்தனர்.

துப்பாக்கி காட்டி வழிபறியில் ஈடுபட்ட ரவுடி... சுற்றிவளைத்துப் பிடித்த போலிஸ்: நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை மாநகர் சம்மட்டிபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சரத்குமார். இவர் எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்துக்கு உட்பட்ட முத்துநகர் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மார்க்கெட் பகுதியில் நடந்து சென்ற ஹரிஹரசுதன் என்பவரைத் துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் மற்றும் தங்கச் செயின் பறித்துள்ளார்.

இதனையடுத்து ஹரிஹரசுதன் அளித்த புகாரின் அடிப்படையில், எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய போலிஸார், சுற்றித்திருந்தப் பிரபல ரவுடி சரத்குமாரைக் கைது செய்து அவரிடமிருந்து விசாரணை நடத்தினர்.

மேலும் அவரை சோதனை செய்த போது அவரிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் துப்பாக்கியை வைத்து வேறு ஏதும் குற்றச் செயல்களில் ஈடுபட்டாரா , துப்பாக்கி எங்கு இருந்து வாங்கப்பட்டது. என்பது குறித்து தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சரத்குமார் மீது கொலை கொலை முயற்சி கொலை வழிப்பறி உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories