தமிழ்நாடு

மாணவர் விசாவில் சென்னை வந்து துறைமுக சொத்தை சூறையாடிய மோசடி கும்பல்: CBI விசாரணையில் வெளிவந்த ரிப்போர்ட்

சென்னை துறைமுகத்துக்கு சொந்தமான நிரந்தர முதலீட்டுத் தொகையான 100 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த விவகாரத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த இருவரை சி.பி.ஐ கைது செய்துள்ளது.

மாணவர் விசாவில் சென்னை வந்து துறைமுக சொத்தை சூறையாடிய மோசடி கும்பல்: CBI விசாரணையில் வெளிவந்த  ரிப்போர்ட்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை துறைமுகத்துக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிரந்தர வைப்பு தொகை பணத்தை, கோயம்பேடு இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதி ராஜா என்பவருடன் சேர்ந்து, போலி ஆவணங்கள் வைத்து மணிமொழி என்பவர் மோசடி செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ-க்கு உத்தரவிடப்பட்ட நிலையில், சி.பி.ஐ விசாரணையில் தரகர் மணிமொழி, சென்னை துறைமுக துணை இயக்குனர் எனக் கூறி நடித்த கணேஷ் நடராஜன் மற்றும் இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதி ராஜா உள்ளிட்ட 9 பேர் மீது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி சேர்மதி ராஜா, மணிமொழி உள்ளிட்டோரை கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சி.பி.ஐ-யின் தொடர் விசாரணையில் மாணவர்களுக்கான விசாவில் வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் சென்னை வந்துள்ளதும், அவர்களுக்கு இந்த மோசடியில் தொடர்பிருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில் ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள கேமரூன் நாட்டைச் சேர்ந்த பெளசிமோ ஸ்டீவ் பெர்னார்ட் யானிக் மற்றும் காங்கோ நாட்டைச் சேர்ந்த முஸ்ஸா இலுங்கா லுசியன் ஆகிய இருவர்தான் ஸ்டூடண்ட் விசாவில் சென்னை வந்து மோசடி விவகாரத்தில் பங்கு கொண்டிருப்பது தெரியவந்தது.

அதனடிப்படையில் சென்னை ராமாபுரத்தில் தங்கியிருந்த அவர்கள் இருவரையும் சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இவ்வழக்கில் இதுவரை மொத்தமாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories