தமிழ்நாடு

“நீட்டை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கலாம்” : நீட் தேர்வு குறித்த ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை சொல்வதென்ன?

நீட் தேர்வால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது

“நீட்டை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கலாம்” : நீட் தேர்வு குறித்த ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை சொல்வதென்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நீட் நுழைவுத் தேர்வு என்பது ஏழை எளிய மாணவர்களின் உயிரைக் குடிப்பதற்கான உயிர்க் கொல்லியாக அமைந்திருக்கிறது. மருத்துவப் படிப்பில் தகுதியின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கறாராகக் கூறியது. ஆனால், அது உருவாக்கியுள்ள நீட் நுழைவுத்தேர்வு தகுதி, திறமை என்பதைக் காற்றில் பறக்க விட்டுவிட்டது.

பொருளாதார வலிமை உள்ளவர்களுக்கு மட்டுமே இப்போது மருத்துவக்கல்வி என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. நீட் நுழைவுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரையில் செய்யப்பட்டுள்ள மாணவர் சேர்க்கை விவரங்களை ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மை புலப்படும். எனவேதான் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளும் ஒருமித்துக் குரல் எழுப்பி வருகின்றனர்.

திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர்க்கட்சியாக இருந்தபோதிலிருந்து இதற்காகப் போராடி வருகிறது. இந்த நிலையில், நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது.

“நீட்டை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கலாம்” : நீட் தேர்வு குறித்த ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை சொல்வதென்ன?

அதனைத் தொடர்ந்து கடந்த 19ம் தேதி, நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்தும் பள்ளி இறுதித் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்பில் சேர்க்கை நடத்தப்படும் என அறிவித்தும் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்பினர் வரவேற்பு அளித்தனர். இதனிடையே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநரிடம் சர்பித்துள்ளது தமிழ்நாடு அரசு. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நீட் தேர்வு குறித்து தனது பரிந்துரியை வழங்கியது. மேலும் முதலமைச்சரிடன் 165 பக்கங்கள் கொண்ட தனது ஆய்வு அறிக்கையும் வழங்கியுள்ளது. இந்த அறிக்கையை தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

“நீட்டை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கலாம்” : நீட் தேர்வு குறித்த ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை சொல்வதென்ன?

இதுதொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நீட் அளித்த பரிந்துரையின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :-

தமிழகத்தில் நீட் தேர்வல் தொடர்ந்து நடந்தால், சுகாதார கட்டமைப்பு, கல்வி பாதிக்கப்படும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாகும்.

அதேபோல், அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இருக்கமாட்டார்கள்.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் நீட் தேர்வு மட்டுமல்ல எந்தவித பொது நுழைவு தேர்வும் நியாயமானதாக இருக்காது.

நீட் தேர்வுக்கு பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்த ஆங்கில வழி மாணவர்களின் சதவீதம் 56.02% முதல் 69.53% ஆக உயர்ந்தது. ஆனால் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் சதவீதம் 14.44% முதல் 1.7% ஆக குறைந்தது.

மேலும் நீட் தேர்வு கோச்சிங் சென்டர்களை பிரபலப்படுத்துகிறதே தவிர கற்றலை அல்ல..

குறிப்பாக முதல் முறை நீர் தேர்வு எழுதுபவர்களை விட, ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் தேர்வு எழுதுபவர்களுக்கு தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறது.

இதற்கு சுமார் 1 லட்சம் முதல் 4.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுகிறது.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக தமிழ்நாடு அரசு தொடங்கலாம்.

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான தனி சட்டம் இயற்றி குடியரசு தலைவரின் அனுமதியை பெறலாம். நீட் தேர்வை ரத்து செய்து சட்டம் இயற்றுவது, மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்திற்கான சமூக நீதியை உறுதி செய்யும்

banner

Related Stories

Related Stories