தமிழ்நாடு

“அதிமுக ஆட்சியில் நிலக்கரியை காணவில்லை; 3 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இல்லை” : அமைச்சர் செந்தில்பாலாஜி!

சூரிய மின்சக்தியை ஊக்கப்படுத்தும் வகையில் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார் .

“அதிமுக ஆட்சியில் நிலக்கரியை காணவில்லை; 3 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இல்லை” : அமைச்சர் செந்தில்பாலாஜி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நெல்லை , தென்காசி மாவட்ட மின்பகிர்மான வளர்ச்சித்திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, “தமிழக வரலாற்றில் ஓரே ஆண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்க கூடிய சிறப்பு மிக்க அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். கடந்த 18 ஆண்டுகளாக மின் இணைப்பிற்கு பதிவு செய்து 4 லட்சத்து 52 ஆயிரத்து 777 பேர் காத்திருக்கின்றனர். கடந்த அ.தி.மு.க ஆட்சி விவசாயிகளின் ஆட்சி என்று கூறிக்கொண்டு விவசாயிகளை வஞ்சித்துள்ளது.

தமிழகம் முழுவதும் தேவையான இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. சூரிய மின்சக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக 20 ஆயிரம் மெகாவாட் சூரிய மின் சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அதிமுக ஆட்சியில் நிலக்கரியை காணவில்லை; 3 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இல்லை” : அமைச்சர் செந்தில்பாலாஜி!

இதன் அடிப்படியில் முதல் கட்டமாக இந்த ஆண்டு 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின்ன எந்தெந்த மாவட்டங்களில் இடங்கள் சாத்தியப்படும் என்பதை பொறுத்து இந்த திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை சூரிய மின் சக்தி் உற்பத்தி சில மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்தது.

தற்போது முதல் முறையாக அந்தந்த மாவட்டங்களிலேயே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மின் இழப்பு தடுக்கப்படும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு என்னென்ன திட்டம் தேவை என்பதை அறிந்து முதல்வர் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். மின்வாரியத்தில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 46 ஆயிரம் பணியிடங்களில் 56 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. விரைவில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

“அதிமுக ஆட்சியில் நிலக்கரியை காணவில்லை; 3 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இல்லை” : அமைச்சர் செந்தில்பாலாஜி!

கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்துறை செயல்பட்டதா என்ற கேள்விக்குறி எழுகிறது, நிலக்கரியைப் பொறுத்தவரை வட சென்னை அனல் மின் நிலையத்தில், 2 லட்சத்து 38 ஆயிரம் டன், தூத்துக்குடியில் 71 ஆயிரம் டன் இருப்பில் குறைந்துள்ளதாக முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. நிலக்கரி மாயமானது தொடர்பாக விசாரணை இறுதி அறிக்கை வந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்சாரத்துறை தொடர்பான புகார் தெரிவிப்பதற்கான வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு 97 சதவீத புகார்கள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. கூடன்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4-வது உலையில் உற்பத்தி செய்யப்படும். மின்சாரத்தை தமிழகத்திற்கு ஒதுக்குவது தொடர்பாக சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின் தெரிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார். கூட்டத்திற்கு முன்னதாக நெல்லை மின்பகிர்மான வட்டம் மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் 2.42 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய 25 எம்.வி.ஏ திறன்கொண்ட மின்மாற்றியை தொடங்கி வைத்தார்.

banner

Related Stories

Related Stories