தமிழ்நாடு

நிபா வைரஸ் தாக்காமல் இருக்க என்ன வழி? - தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வழிமுறைகள்!

கேரளாவில் பரவும் நிபா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்த்துறை வெளியிட்டுள்ளது.

நிபா வைரஸ் தாக்காமல் இருக்க என்ன வழி? - தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வழிமுறைகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நிபா வைரஸ் நோய் பரவும் விதம் மற்றும் தடுப்பு வழிமுறைகள் பற்றிய தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் குடும்ப நலத்துறை வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில், “நிபா வைரஸ் என்னும் வைரஸ் கிருமியால் ஏற்படும் ஒருவகை காய்ச்சலாகும். இது மூளை, இருதயம் ஆகியவற்றை பாதிக்கும் . முதன்முதலில் 1998-99ல் மலேசியா , சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நோய் தாக்கம் ஏற்பட்டது. 2019ல் கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த நோய் பாதிப்பு கேரளாவில் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது.

நிபா வைரஸ் நோய் பரவும் விதம்:- நிபா வைரஸ் நோய் என்பது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு நோயாகும்.

இந்த நோயை உண்டாக்கும் வைரஸ் பழந்தின்னி வாவ்வால்கள் மூலமாக பெருக்கம் அடைகிறது.

நோய்வாய்ப்பட்ட பழந்திண்ணி வவ்வால்கள், பன்றி மற்றும் பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது.

பழந்தின்னி வவ்வால்கள் கடித்த பழங்களை உண்பதன் மூலமாக மனிதர்களுக்கு பரவ அதிக வாய்ப்புள்ளது.

நிபா வைரஸ் நோயின் அறிகுறிகள்: -

நிபா வைரஸ் நோயானது மூளை காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும் . கடும் காய்ச்சல் , தலைவலி, மயக்கம் , சுயநினைவு இழத்தல், மனக்குழப்பம் , கோமா மற்றும் மரணம் ஏற்படலாம்.

கிருமித் தொற்று ஏற்பட்டு 5 முதல் 15 நாட்களுக்குள் இந்த நோயின் அறிகுறிகள் வெளிப்படும். மேலும் அறிகுறிகள் தென்பட்ட 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் தீவிர மயக்கநிலை சுயநினைவு இழத்தல் மற்றும் மனக்குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

நிபா வைரஸ் நோய் கண்டறியும் முறைகள்: -

காய்ச்சல் மற்றும் மூளை அழற்சி நோய்கள் பரிசோதனை செய்ய வேண்டும்.

மருத்துவர்களின் நோய் அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் மூளை அழற்சி நோய்களுக்கான பரிசோதனை அடிப்படையில் நிபா வைரஸ் என சந்தேகிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதித்து கண்டறியலாம்.

நிபா வைரஸ் தாக்காமல் இருக்க என்ன வழி? - தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வழிமுறைகள்!

சிகிச்சை :-

நிபா வைரஸ் நோய் தாக்கி அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிப்பதன் மூலம் குணப்படுத்தலாம்.

நிபா வைரஸ் நோய் பரவாமல் தடுக்கும் முறைகள்: -

இந்நோய் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுவதால் பாதிக்கப்பட்ட நபர்களை தனிமை அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவர்கள் மற்றும் கவனித்துக் கொள்பவர்கள் உரிய பாதுகாப்பு முறைகளான முகக்கவசம் அணிதல், முறையாக கை கழுவுதல், நோயாளிகள் பயன்படுத்திய பொருட்களை பத்திரமாக அப்புறப்படுத்தி தொற்று நீக்கம் செய்தல் போன்றவற்றை கையாள வேண்டும்.

காய்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும்.

வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது. வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பன்றிகளை குடியிருப்பு பகுதிகளில் இருந்து அகற்ற வேண்டும். நோய்வாய்ப்பட்ட பன்றிகள் காணப்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவ துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையின் மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை .

banner

Related Stories

Related Stories