தமிழ்நாடு

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: வாக்குமூலம் அளித்த சயான் உயிருக்கு பாதுகாப்பு இல்லை - வெளியான பகீர் தகவல்!

கொடநாடு கொள்ளை, கொலை சம்பவத்தில் ஜாமீனில் உள்ள சயான் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் சயான் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: வாக்குமூலம் அளித்த சயான் உயிருக்கு பாதுகாப்பு இல்லை - வெளியான பகீர் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு தேயிலை தோட்டத்தில் உள்ள ஆடம்பர பங்களாவில் அ.தி.மு.கவின் பல்வேறு மிக முக்கிய கோப்புகள், ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன. பின்னர் அங்கு கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அப்போது ஓம் பகதூர் என்ற காவலாளி கொல்லப்பட்ட நிலையில், பங்களாவில் இருந்த பல அ.தி.மு.க கோப்புகள் கொள்ளை அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனரும், எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினருமான கனகராஜ், சயான், மனோஜ், உதயன் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், 2017 ஏப்ரல் 28ஆம் தேதி முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் சேலத்தில் வாகன விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அதேநாளில் கோவை - பாலக்காடு சாலையில் இரண்டாவது குற்றவாளியான சயான் தனது மனைவி குழந்தையுடன் காரில் சென்றபோது மர்ம வாகனம் மோதியதில் சயானின் மனைவி, குழந்தை ஆகியோர் துடிதுடித்து உயிரிழந்தனர். இச்சம்பவம் நடைபெற்று ஒரே வாரத்தில் கொடநாடு கணினி பொறியாளர் தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: வாக்குமூலம் அளித்த சயான் உயிருக்கு பாதுகாப்பு இல்லை - வெளியான பகீர் தகவல்!

அடுத்தடுத்த 4 மரணங்கள் பெரும் சர்ச்சையையும் சந்தேகத்தையும் எழுப்பிய நிலையில் சயான், மனோஜ் ஆகியோர் நான்கு வருடங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட போது காவல்துறை மற்றும் நீதிபதிகளிடம் கூடலூர் பகுதியை சேர்ந்த மர வியாபாரி சஜீவன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக வாக்குமூலம் அளித்தனர்.

ஆனால், காவல்துறையினர் அப்போது வழக்கை வேறு திசைக்கு கொண்டு சென்று சயான், மனோஜ் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை தற்போது உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 13ம் தேதி கோத்தகிரி போலிஸார் சயானிடம் மீண்டும் மறு விசாரணை செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா சயானிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கினார். இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணையில் உண்மை வெளியாகவுள்ள நிலையில், இந்த கொலைவழக்கில் தொடர்புடைய எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவருமே கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே குன்னூர் சிறையிலுள்ள மற்றொரு குற்றவாளியான மனோஜ்யிடம் விசாரணை நடத்தவும் காவல் துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், கடந்த 17ம் தேதி மாலை காவல்துறையினர் சாயனிடம் நடத்தப்பட்ட மறு விசாரணையில் சஜீவன் என்பவர் கொள்ளை சம்பவத்திற்கு உதவியாக இருந்ததாக சயான் கூறியுள்ளார்.

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: வாக்குமூலம் அளித்த சயான் உயிருக்கு பாதுகாப்பு இல்லை - வெளியான பகீர் தகவல்!

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அ.தி.மு.க வர்த்தகர் அணி அமைப்பாளர் சஜீவன் என்பவரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு அவர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டால் கொள்ளை சம்பவம் குறித்த பல ரகசியங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது சயான் நிபந்தனா ஜாமீனில் சயான் உதகையில் இருக்கும் நிலையில், அவர் உயிருக்கு அச்சுறுதல் இருப்பதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவ்த்யிடம் சயான் வழக்கறிஞர் விஜியன் அவர்கள் சாயனுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் மனு அளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories