தமிழ்நாடு

"மின்னல்வேக வளர்ச்சி.. ரூ.100 கோடி வருவாய் ஈட்டிய எஸ்.பி.வேலுமணியின் நிறுவனங்கள்": ரெய்டின் பின்னணி என்ன?

எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான நிறுவனங்கள் ஒரே ஆண்டில் 100 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

"மின்னல்வேக வளர்ச்சி.. ரூ.100 கோடி வருவாய் ஈட்டிய எஸ்.பி.வேலுமணியின் நிறுவனங்கள்": ரெய்டின் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அ.தி.மு.க ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவருக்குச் சொந்தமான 52 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல், அரசு ஒப்பந்தங்களைத் தனது உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான, ஆலம் கோல் அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் தொடங்கி ஒரே வருடத்தில் 100 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல் constromall goods pvt ltd நிறுவனம் 2018-19 நிதியாண்டில் 0.84 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது. அதற்கு அடுத்த வருடமான 2019-2020 நிதியாண்டில் 3.14 கோடி ரூபாய் வருவாய் உயர்ந்துள்ளது.

அதேபோல், constronics india என்ற நிறுவனம் 2015-2016 நிதியாண்டில் 0.86 கோடி ரூபாய் ஈட்டி உள்ளது. ஆனால் 2017-18ம் நிதியாண்டில் இந்நிறுவனம் 42.11 கோடியாக வருவாய் உயர்ந்துள்ளது. இதேபோல் ஓசூர் பில்டர்ஸ் நிறுவனம் 2015-2016 நிதியாண்டில் 0.93 கோடி ரூபாய் ஈட்டி உள்ளது. ஆனால் 2017-18ம் நிதியாண்டில் இந்நிறுவனம் 19.61 கோடியாக வருவாய் உயர்ந்துள்ளது.

மேலும், 2012ல் 42 கோடிக்கு ரூபாய்க்கு வர்த்தகம் செய்துவந்த கே.சி.பி என்ஜினியர்ஸ் நிறுவனம் 2018ம் ஆண்டு தனது வருவாயை 453 கோடியாக உயர்த்தியுள்ளது. ஏ.சி.இ டெக் மெஷினரி நிறுவனமும் 2018ம் ஆண்டு 155 கோடிக்கு ரூபாய்க்கு தனது வர்த்தகத்தை அதிகரித்துள்ளது.

இப்படி அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமாக உள்ள நிறுவனங்களில் வர்த்தக மதிப்பு ஒரே ஆண்டில் பல மடங்கு அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்தான் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories