தமிழ்நாடு

தமிழ்நாட்டின் இரண்டாவது திருநங்கை எஸ்.ஐயாக சிவன்யா தேர்வு: பணி ஆணை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் !

தமிழ்நாட்டின் இரண்டாவது திருநங்கை எஸ்.ஐ.யாக சிவன்யா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாட்டின் இரண்டாவது திருநங்கை எஸ்.ஐயாக சிவன்யா தேர்வு: பணி ஆணை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் உள்ள பாவுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவன்யா. பி.காம் பட்டதாரியான இவர் தற்போது ட்டம் ஒழுங்கு பிரிவில் காவல் துணை ஆய்வாளராக (Sub Inspector) நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் தமிழ்நாட்டின் இரண்டாவது திருநங்கை எஸ்.ஐ.யாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

முன்னதாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி இந்தியாவிலேயே முதல் சப்-இன்ஸ்பெக்டராகத் தேர்வுசெய்யப்பட்ட திருநங்கை ஆவார். இதனையடுத்து தற்போது, சிவன்யா சட்டம் ஒழுங்கு பிரிவில் காவல் துணை ஆய்வாளராக தேர்வு பெற்றுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் உள்ள பாவுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவன்யா. பி.காம் பட்டப்படிப்பை முடிந்த இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் காவல்துறை பயிற்சி மையத்தில் சேர்ந்து தேர்வு எழுதி வெற்றிப்பெற்றுள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவன்யாவுக்கான பணியாணை நேற்று முன் தினம் வழங்கியுள்ளார். அவருடன் டி.ஜி. பி சைலேந்திர பாபு உடன் இருந்தார். இதுகுறித்து சிவன்யா கூறுகையில், “காவல் துணை ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம் எனது சந்தோஷத்திற்கு எல்லை இல்லை, இதன் மூலம் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது.

தமிழ்நாட்டின் இரண்டாவது திருநங்கை எஸ்.ஐயாக சிவன்யா தேர்வு: பணி ஆணை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் !

அதுவும் முதல்வரின் கையால் பணி நியமன ஆணையை பெற்றது கூடுதல் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்தது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்துத் தேர்வுக்காக என் மீது வீசப்பட்ட கேலி, கிண்டல்களை எல்லாம் பொருட்படுத்தாமல், போட்டித் தேர்வுக்கான தயாரிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தியதால், இறுதியில் நான் கண்ட கனவை நிறைவேற்ற முடிந்தது.

கொரோன நோய்த் தொற்று கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அறிவிக்கப் பட்டிருந்து பொதுமுடக்கத்தால் “உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு காலதாமதம் ஏற்பட்டது வேதனையான இருந்தாலும், நான் அமைதியை இழக்கவில்லை. எனது காவல்துறை அதிகாரி கனவு நிறைவேற்றப் பட்டிருந்தாலும் தற்போதைய காவல் துணை ஆய்வாளர் பணியைவிட காவல் கண் காணிப்பாளராக (டி.எஸ்.பி) வேண்டும் என்பதே எனது லட்சியம் என்று கூறும் சிவன் யார், அதற்காக தெர்டர்ந்து குரூப்-1 தேர்வுக்கு தயாராகி வருகிறேன்.

நிச்சயம் பெற்றி பெறுவேன். எனது வெற்றிக்கு குடும்பத்தினர் அனைவரின் ஆதரவே காரணம். “என் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆதரித்தன் மூலம் இந்த வெற்றியை என்னால் பெற முடிந்தது. அரசு வேலைக்குச் செல்ல விரும்பும் திருநங்கைகளுக்கு ஒரு முன்மாதிரியாக, தமிழ்நாட்டின் முதல் திருநங்கை காவல் துணை ஆய்வாளர் பிரித்திகா யாஷினி முன்மாதிரியாக இருந்து வருகிறார்.

காவல்துறை பணியில் அவர் பெற்ற வெற்றி, லட்சியத்தை அடைவதில் எங்களுக்கு இருந்த அனைத்து முரண்பாடுகளையும், எதிர்த்துப் போராடுவதற்கான தைரியத்தை அளித்தது.” எனத் தெரிவித்துள்ளார். பல கேலி கிண்டலுக்கு மத்தியில் தனது விடாமுயற்சியால் காவல் துணை ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சிவன்யாவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories