தமிழ்நாடு

“அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் 100 நாட்களில் செயல்படுத்தப்படும்” : அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் 100 நாட்களில் முழுமையாக செயல்படுத்தப்படும் என திருப்பூர் மாவட்டம் திருக்கோயில்களில் ஆய்வு மேற்கொண்ட அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

“அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் 100 நாட்களில் செயல்படுத்தப்படும்” : அமைச்சர்  சேகர்பாபு பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருப்பூர் காங்கேயம் அருகே உள்ள சிவன் மலை தண்டாயுதபாணி திருக்கோயில் திருமுருகண்பூண்டி திருமுருகநாத சுவாமி திருக்கோவில், விஸ்வேஸ்வரர் ஆலயம், வீரராகவ பெருமாள் திருக்கோவில் உள்ளிட்ட இடங்களில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் மற்றூம் இந்து அறநிலையத்துறை ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வில் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “ தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதல்படி தமிழகமெங்கும் இருக்கின்ற திருக்கோயில்களில், ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெற வேண்டும் என இருக்கின்ற திருக்கோயில்கள், குடமுழுக்குக்காக எடுத்துக் கொண்ட திருக்கோவில்கள் பணி தொய்வடைந்து இருக்கின்ற நிலை மற்றும் பணிபுரிகின்ற பணியாளர்கள் அர்ச்சகர்கள் அவர்களை நேரடியாக சந்தித்து அவருடைய குறைகளை கேட்டு, குடமுழுக்கு பணிகளை விரைவுபடுத்த வகையிலும் ஆய்வு மேற்க்கொண்டு வருகிறோம்.

“அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் 100 நாட்களில் செயல்படுத்தப்படும்” : அமைச்சர்  சேகர்பாபு பேட்டி!

மேலும், திருக்கோயில் நிலங்களில் முறையாக வாடகை செலுத்தாமல் இருக்கின்ற நிலையையும், அதேபோல் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களையும் கண்டறிந்து அது குறித்த நடவடிக்கைகளை கள ஆய்வு செய்ய முதலமைச்சர் அவர்கள் உத்தரவின் பேரில் நேற்று சேலம் மற்றும் கோயம்புத்தூர் திருப்பூர் என்று பல திருக்கோயில்களில் இந்த ஆய்வினை மேற்கொண்டு இருக்கின்றோம்.

தமிழகத்தில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டிய திருக்கோவில்களை, முதலமைச்சர் அவர்கள் கண்டறிய உத்தரவிட்டு, முதற்கட்டமாக ஆளுநர் உரையிலே ரூ.100 கோடி செலவில் அந்த பணிகளை செய்திட முடுக்கி விடுவதற்காக மாவட்டம் தோறும் இப்படிப்பட்ட ஆய்வுளை நேரடியாக சென்று களத்திலே ஆராய்ந்து வருகின்றோம்.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பொறுத்தளவில், எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு, வருமானம் தரக்கூடிய கோயில்கள் வருமானம் இல்லாத சிறு கோவில்கள் என்ற நிலையை மாற்றி, அனைத்து திருக்கோயில்களிலும் ஒரு கால பூஜை நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.

அந்த வகையில், இந்த ஆண்டு மிகப்பெரிய அளவிலே கும்பாபிஷேகம் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளை தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் நடைபெற உள்ளது. ஆகவே ஆன்மீக மக்களுக்கு ஒரு பொற்க்கால ஆட்சியாகவே இருக்கும்.

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது முதல், நம்முடைய துறை செயலாளர் அதிலும் குறிப்பாக ஆணையாளர் அவர்கள் மற்ற அனைத்து அதிகாரிகளும் முனைப்போடு செயல்பட்டு, இந்த 75 நாட்களில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் அதிக இடங்களை மீட்டு இருக்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories