தமிழ்நாடு

புதுவையில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்ற ஓவியர்கள் கைது; ரூ.58 லட்ச போதைப் பொருட்கள் சிக்கியது எப்படி?

பிறந்த நாள் பரிசு என்ற பெயரில் ஸ்பெயின் நாட்டிலிருந்து கொரியா் பாா்சலில் போதை மாத்திரைகள்,போதை ஸ்டாம்புகள் வரவழைத்த ஓவியக் கலைஞா்கள் இருவா் சென்னை விமானநிலையத்தில் கைது.

புதுவையில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்ற ஓவியர்கள் கைது; ரூ.58 லட்ச போதைப் பொருட்கள் சிக்கியது எப்படி?
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஸ்பெயின் நாட்டிலிருந்து சரக்கு விமானம் ஒன்று சென்னை பழைய விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த கொரியா் பாா்சல்களை சென்னை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது ஸ்பெயினிலிருந்து புதுவை மாநிலம் அரோவில் நகரில் உள்ள ஒரு முகவரிக்கு ஒரு பாா்சல் வந்திருந்தது. அதனுள் பிறந்தநாள் பரிசுகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பாா்சலை திறந்து பாா்த்து சோதனையிட்டனா்.

அந்த பாா்சலில் 994 போதை மாத்திரைகளும், 249 போதை ஸ்டாம்புகளும் இருந்தன. அதன் சா்வதேச மதிப்பு ரூ.56 லட்சம். இதையடுத்து போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்புகளை பறிமுதல் செய்தனா். அதோடு அந்த பாா்சலில் உள்ள அரோவில் நகரில் உள்ள முகவரிக்கு சுங்கத்துறையின் தனிப்படையினா் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

புதுவையில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்ற ஓவியர்கள் கைது; ரூ.58 லட்ச போதைப் பொருட்கள் சிக்கியது எப்படி?

அங்கு அந்த முகவரியில் திருநெல்வேலியை சோ்ந்த ரூபக் மணிகண்டன் (29), லாய் விகூஸ் (28) ஆகிய இருவா் இருந்தனா். அவா்களிடம் விசாரணை நடத்தியபோது அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினா். இதையடுத்து அவா்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டனா். அங்கு இரு பாா்சல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.2.5 லட்சம் மதிப்புடைய 5.5 கிலோ கஞ்சா போதைப் பொருட்கள் இருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா்.

இருவரிடமும் மேலும் விசாரணை நடத்தினா். இவா்கள் இயற்கை ஓவிய கலைஞா்கள். இவா்கள் இதைப்போல் வெளிநாடுகளிலிருந்து போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்புகள் வரவழைத்து கல்லூரி மாணவா்கள், இளைஞா்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

புதுவையில் இளைஞர்களுக்கு கஞ்சா விற்ற ஓவியர்கள் கைது; ரூ.58 லட்ச போதைப் பொருட்கள் சிக்கியது எப்படி?
DELL

அதைப்போல் ஆந்திரா மாநிலம் குண்டூரிலிருந்து கஞ்சா போதைப் பொருளையும் வாங்கி வந்து விற்பனை செய்து வந்துள்ளனா். இதையடுத்து இருவரையும் சுங்கத்துறை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனா். அவா்களிடமிருந்து மொத்தம் ரூ.58.5 லட்சம் மதிப்புடைய போதை மாத்திரைகள், போதை ஸ்டாம்புகள், கஞ்சா போதைப் பொருட்கள் பறிமுதல் செய்ததாக வழக்குப்பதிவு செய்தனா். இருவரையும் சென்னை ஆலந்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.

banner

Related Stories

Related Stories