தமிழ்நாடு

‘திராவிடப் பெண்கள்’ தூரிகை ஓவியர் இளையராஜா கொரோனாவால் உயிரிழப்பு : கலை உலகம் அதிர்ச்சி !

புகழ்பெற்ற ஓவியர் இளையராஜா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘திராவிடப் பெண்கள்’ தூரிகை ஓவியர் இளையராஜா கொரோனாவால் உயிரிழப்பு : கலை உலகம் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் எனும் கிராமத்திச் சேர்ந்தவர் ஓவியர் இளையராஜா. இவர் தீட்டிய ஓவியங்கள், புகைப்படமா அல்லது நிஜமாகவே ஓவியம் தானா என அந்த அளவிற்கு காண்போரை ஒரு நிமிடம் யோசிக்கவைக்கும். அந்த அளவு இவரின் படைப்பு தத்ரூபமாக இருக்கும்.

ஆனந்த விகடனில் 2010 முதல் வெளிவரத் தொடங்கிய இவரது ஓவியங்கள் உலகம் முழுக்க புகழ்பெற்றன. பல்வேறு விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றிருக்கும் ஓவியர் இளையராஜா நேற்று நள்ளிரவு கொரோனா தொற்றால் மாரடைப்பு ஏற்பட்ட உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் அக்கா மகளின் திருமணத்துக்காகக் கும்பகோணத்துக்குச் சென்று, பின்னர் சென்னை திருப்பியிருக்கிறார் இளையராஜா. அங்குக் குளத்தில் குளித்ததால் அவருக்குச் சளி பிடித்துள்ளது என நண்பர்களிடம் கூறி மருந்துக் கடையில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டிருக்கிறார்.

‘திராவிடப் பெண்கள்’ தூரிகை ஓவியர் இளையராஜா கொரோனாவால் உயிரிழப்பு : கலை உலகம் அதிர்ச்சி !

இதையடுத்து அவரது குடும்பத்தில் பலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் சில நாட்களுக்கு முன்னர் மூச்சடைப்பின் காரணமாக எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓவியர் இளையராஜா சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.

அடுப்படியில் சமைக்கும் பெண், வாசலில் உட்கார்ந்து பூ கட்டும் பெண், ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்க்கும் பெண் என கிராமத்துப் பெண்களை அழகாக வரைப்பட்டிருக்கும் ஓவியங்களை நாம் அனைவருமே பார்த்திருப்போம். அந்த புகழ்பெற்ற ஓவியங்களை வரைந்தவர் இளையராஜாதான். இவரின் இந்த 'திராவிடப் பெண்கள்' ஓவியங்கள் மிகவும் புகழ்பெற்றவை.

இந்நிலையில், ஒவியர் இளையராஜாவும் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தம் தனித்துவமிக்க, இயல்பான ஓவியங்களினால் நம் கவனம் ஈர்த்த நுட்பமான ஓவியர் இளையராஜா அவர்களின் மறைவுச் செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்! கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்தும் நம்மோடு வாழ்வர்; ஓவியர் இளையராஜாவும் வாழ்வார்!” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாவால் இன்னொரு தலைசிறந்த கலைஞனைப் பறிகொடுத்திருக்கிறோம் என சக ஓவியர்களும், எழுத்தாளர்களும், திரைப்பட இயக்குநர்களும் அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

‘திராவிடப் பெண்கள்’ தூரிகை ஓவியர் இளையராஜா கொரோனாவால் உயிரிழப்பு : கலை உலகம் அதிர்ச்சி !
‘திராவிடப் பெண்கள்’ தூரிகை ஓவியர் இளையராஜா கொரோனாவால் உயிரிழப்பு : கலை உலகம் அதிர்ச்சி !
‘திராவிடப் பெண்கள்’ தூரிகை ஓவியர் இளையராஜா கொரோனாவால் உயிரிழப்பு : கலை உலகம் அதிர்ச்சி !
‘திராவிடப் பெண்கள்’ தூரிகை ஓவியர் இளையராஜா கொரோனாவால் உயிரிழப்பு : கலை உலகம் அதிர்ச்சி !
‘திராவிடப் பெண்கள்’ தூரிகை ஓவியர் இளையராஜா கொரோனாவால் உயிரிழப்பு : கலை உலகம் அதிர்ச்சி !
‘திராவிடப் பெண்கள்’ தூரிகை ஓவியர் இளையராஜா கொரோனாவால் உயிரிழப்பு : கலை உலகம் அதிர்ச்சி !
‘திராவிடப் பெண்கள்’ தூரிகை ஓவியர் இளையராஜா கொரோனாவால் உயிரிழப்பு : கலை உலகம் அதிர்ச்சி !
banner

Related Stories

Related Stories