தமிழ்நாடு

வெளிநாட்டில் இருந்து அதிநவீன கருவிகள் இறக்குமதி.. ஆக்சிஜன் உற்பத்தியில் வேகம் காட்டும் தமிழக அரசு!

அமெரிக்கா உள்ளிட்ட வெளிகநாடுகளில் இருந்து நான்கு சரக்கு விமானங்களில் ஆக்ஜிசன் தயாரிக்கும் கருவிகள் சென்னை விமானநிலையம் வந்தடைந்தன.

வெளிநாட்டில் இருந்து அதிநவீன கருவிகள் இறக்குமதி.. ஆக்சிஜன் உற்பத்தியில் வேகம் காட்டும் தமிழக அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் தீவிரமாகப் பரவி வருகிறது. ஏற்கனவே நாட்டின் வட மாநிலங்களில் பெருமளவு தாக்குதல் நடத்திய கொரோனா வைரஸ்,தற்போது தென்மாநிலங்களிலும் வீரியம் எடுத்துள்ளது. அந்த நிலையில் தமிழகத்திலும் பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதையடுத்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு போா்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முழு ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது .ஆனாலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு பெரும் பிரச்னையாக உள்ளது.

எனவே ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதிலும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஆக்சிஜனை தமிழகம் கொண்டு வருவதற்கும் தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். இதற்கிடையே தனியாா் நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகளை பெருமளவு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன. அரசும் அதற்கு அனுமதி அளித்துள்ளது.

அதைப்போல் சென்னை விமானநிலையத்திலும் வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து விமானங்களில் வரும் மருத்துவம் சம்பந்தப்பட்ட கருவிகள், உபகரணங்கள், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள் போன்றவைகள் வந்தால், அவைகளுக்கு முன்னுரிமையளித்து, சுங்கச்சோதனை, முகவரி சரி பாா்த்தல் என்ற பெயரில் காலதாமதம் செய்யாமல் உடனடியாக டெலிவரி கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று இரவு அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஹாங்காங்கிலிருந்து 4 சரக்கு விமானங்கள் சென்னை பழைய விமானநிலைய சரக்கக பிரிவுக்கு வந்தன. அந்த விமானங்களில் 50 ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகள் வந்திறங்கின. நள்ளிரவாக இருந்தாலும், மற்ற பணிகளை எல்லாம் நிறுத்தி வைத்துவிட்டு, இந்த 50 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளையும் உடனடியாக உடனடியாக டெலிவரி கொடுத்து அனுப்பினா்.

மருத்துவ உபகரணங்கள் டெலிவரி செய்வதில் காலதாமதம் ஏற்படாமல் செயல்படுவதை கண்காணிக்க சுங்கத்துறை மற்றும் விமானநிலைய அதிகாரிகள் இணைந்து ஒரு குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories