தமிழ்நாடு

இன்று மட்டும் கொரோனா பாதித்த 241 பேர் பலி... தமிழகத்தில் 27 ஆயிரத்தைக் கடந்த தினசரி பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 241 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 15,412 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 241 பேர் பலி... தமிழகத்தில் 27 ஆயிரத்தைக் கடந்த தினசரி பாதிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று திருவள்ளூரில் 1,284 பேருக்கும், மதுரையில் 1,217 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 27,397 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,51,362 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 1,48,295 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 2,34,18,282 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 6,846 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,83,644 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,458 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 2,117 பேருக்கும், திருவள்ளூரில் 1,284 பேருக்கும், மதுரையில் 1,217 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பிரிட்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் 40 பேருக்கும் அவர்களின் மூலமாக 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 23,110 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 11,96,549 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 1,39,401 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 241 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 90 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 151 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 15,412 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories