தமிழ்நாடு

“சென்னையில் அடுத்த இருபது நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும்” : சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி!

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் வீடுதேடி வரும் மாநகராட்சி ஊழியர்களிடம் தயக்கமின்றி தெரியப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

“சென்னையில் அடுத்த இருபது நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும்” : சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்திலும் குறிப்பாக, சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் 1000-ஐ நெருங்கி வருகிறது. கடந்த 24-ம் தேதி 620 ஆக இருந்த கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 846-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கடுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கையை எடுக்கவேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட வலியுறுத்தி வருகின்றது. இதனையடுத்து நேற்றைய தினம் கொரோனா தொற்றைக் கடுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தலைமையில் ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது.

“சென்னையில் அடுத்த இருபது நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும்” : சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி!

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், சென்னை பாலவாக்கம் பகுதியில் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம், வீடு வீடாக சென்று நடத்தப்படும் பரிசோதனைகளை பார்வையிட்ட பின் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், அறிகுறிகள் தென்படும் போது தொடக்கத்திலேயே சோதனை செய்துக்கொண்டால் உயிரிழப்புகளை தடுப்பதோடு மற்றவர்களுக்கு பரவுவதையும் தவிர்க்க முடியும் என்றார். சென்னையில் தடுப்பூசி செலுத்த வேண்டிய 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்தால் 10 நாட்களில்  அனைவருக்குமே தடுப்பூசி செலுத்திவிட முடியும் என்றும் முடிந்தவரை சீக்கிரம் தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது என்றார்.

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 பேருக்கு குறையாமல் சேர்ந்து அனுகினால், அவர்கள் இருப்பிடத்திலேயே தடுப்பூசி முகாம்கள் ஒருங்கிணைக்கப்படும் மேலும் ஒவ்வொரு வார்டுகளிலும் காய்ச்சல் முகாம்களும், வீடுவீடாக சென்று சோதனையும் செய்யப்படுகிறது. வீடுகளுக்கு சோதனை செய்ய வருபவர்களிடம் பொதுமக்கள் ஒளிவுமறைவின்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

“சென்னையில் அடுத்த இருபது நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும்” : சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி!

சென்னையில் அடுத்த இருபது நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும் என்ற அவர், விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிப்பது வருவாய்காக இல்லை, மக்களிடையே கட்டுப்பாடு கொண்டு வரவே என்றார்.

அதேபோல் கொரோனா நம் வாழ்க்கையில் ஒரு அங்கம் போல் ஆகிவிட்டதால், அதனை முழுமையாக முடக்க முடியாது என்று கூறிய பிரகாஷ், கோயம்பேடு இல்லாமல் 80 மார்க்கெட்டுகள் சென்னையில் உள்ளது என்றும், குறிப்பாக அதிக கூட்டம் விடுமுறை நாட்களில் காசிமெட்டில் கூடுகிறது என்றும் கூறினார்.

எனவே அந்த பகுதி தான் மிகவும் சவாலாக இருக்கிறது என்று கூறிய அவர், மீன்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அந்த பகுதியில் கூட்டம் குறைக்க முடிவெடுக்கப்படும் என்றார். மெரினா கடற்கரை உள்ளிட்ட மக்கள் கூடும் இதர இடங்களில் கட்டுபாடு கொண்டு வருவது தொடர்பாக ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories