தமிழ்நாடு

"1 ரூபாய் இட்லி பாட்டியின் கனவை நிறைவேற்றும் ஆனந்த் மஹிந்திரா” - புதிய வீட்டுக்கான பணிகள் துவக்கம்!

கோவையில் 1 ரூபாய்க்கு இட்லி வழங்கும் கமலாத்தாள் பாட்டியை பாராட்டி, மஹிந்திரா குழுமம் அவருக்கு வீடு கட்டி தருவதற்கான ஆவணங்களை வழங்கியது.

"1 ரூபாய் இட்லி பாட்டியின் கனவை நிறைவேற்றும் ஆனந்த் மஹிந்திரா” - புதிய வீட்டுக்கான பணிகள் துவக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கோயம்புத்தூரில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி வழங்கி வந்த மூதாட்டி கமலாத்தாளுக்கு மஹிந்திரா நிறுவனம் சொந்த வீடு கட்டி தருவதற்கான ஆவணங்களை வழங்கியது.

கோவையில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி என விற்பனை செய்து வருபவர் கமலாத்தாள். இவரது சேவையை அறிந்த மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், அவரை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு வாழ்த்தியதோடு, விறகு அடுப்புக்கு மாற்றாக சமையல் எரிவாயு அடுப்பையும் கமலாத்தாளுக்கு வழங்கினார்.

தொடர்ந்து மலிவான விலையில் மக்களுக்கு உணவு வழங்கி வந்த கமலாத்தாள், சொந்த இடத்தில் கொஞ்சம் பெரிய அளவில் இந்தச் சேவையை வழங்க வேண்டுமென விருப்பம் தெரிவித்தார்.

கமலாத்தாள் கடையில் உணவுண்ட தி.மு.க வேட்பாளர்
கமலாத்தாள் கடையில் உணவுண்ட தி.மு.க வேட்பாளர்

இந்நிலையில், மஹிந்திரா குழுமத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான மஹிந்திரா லைஃப் ஸ்பேசஸ் நிறுவனம் கமலாத்தாளுக்கு சொந்தமாக நிலம் வாங்கி, அதைப் பதிவு செய்த ஆவணத்தை அவரிடம் வழங்கியுள்ளது.

மஹிந்திரா வழங்கியுள்ள நிலத்தில் கமலாத்தாளுக்கு வீடு மற்றும் இட்லிக் கடை நடத்துவதற்கான கட்டுமானப் பணிகளையும் அந்த நிறுவனம் தற்போது தொடங்கியிருக்கிறது.

மக்கள் பசியாற சேவையாற்றும் கமலாத்தாள் அவர்களுக்கு மஹிந்திரா நிறுவனம் உதவும் செய்தி அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories