தமிழ்நாடு

ஒரு தலைமுறையையே பாழாக்கிய எடப்பாடி அரசு.. செல்லாகாசாகும் கல்வி.. குழப்பத்தில் மாணவர்களின் எதிர்காலம்!

இப்போது நிம்மதி பெருமூச்சு விடும் மாணவர்கள் எதிர்காலத்தில் இப்படி ஒரு பிரச்சினையையும் சந்திக்க நேரிடலாம் என சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் எச்சரிக்கின்றனர்.

ஒரு தலைமுறையையே பாழாக்கிய எடப்பாடி அரசு.. செல்லாகாசாகும் கல்வி.. குழப்பத்தில் மாணவர்களின் எதிர்காலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பொதுத்தேர்வு மதிப்பெண் என்பது வாழ்வில் உயர்ந்த நிலைக்கு முன்னேறும் வரைக்கும் மாணவர்களுக்கு அனைத்து கட்டத்திலும் அவசியம். அரசு வேலைக்குச் சென்றாலும், தனியார் வேலைக்குச் சென்றாலும் மதிப்பெண் பட்டியல்தான் அவன் திறமைக்கு சான்று. ஆனால் இதை உணராத தமிழக அரசு 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இல்லாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளது நகைப்புக்குரியது. விளையாட்டு துடுக்கோடு சுற்றித்திரியும் மாணவர்கள் தாஸ்... தாஸ்... ஆல்.. பாஸ்.. பாஸ்.. என்று இதை ஜாலியாக தற்போது எடுத்துக் கொள்ளலாம்.

கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் ஓராண்டாக மூடப்பட்டன. ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்ட பிறகு டாஸ்மாக் உள்பட அனைத்தும் திறக்கப்பட்டன. ஆனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று அரசிடமிருந்து தெளிவான பதில் வரவேயில்லை. பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை என்றும், பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றும் ஓராண்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அளித்த பேட்டி மட்டுமே சதம் அடித்தது. அரசுக்கோ, அதிகாரிகளுக்கோ மாணவர்கள் எதிர்காலம் குறித்து எந்த அக்கறையும் கிடையாது கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்கள் பாடம் கற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது. ஆன்லைன் வகுப்புகளை நடத்தியது. பிறகு பாடத்திட்டம் பாதியாக குறைக்கப்பட்டது.

அரசு பொறுப்பேற்குமா?

இதற்கிடையில், ஆன்ட்ராய்டு செல்போன் வாங்க வசதியில்லாமலும், ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க முடியாத விரக்தியிலும், பாடம் புரியவில்லை என்ற பயத்திலும் மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடந்தேறியது. இந்நிலையில், கல்வியில் அரசியல் புகுந்து விளையாடியது. சட்டமன்றத் தேர்தலில் வாக்கு வங்கியை குறிவைத்து அ.தி.மு.க. அரசு 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சியை பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளது. இதனால் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத் தேர்வை சந்திக்காமல் அடுத்த வகுப்புக்குச் செல்ல இருக்கிறார்கள். ஆனால் படிப்பை தங்களது எதிர்காலம் என்று கருதி கற்றல் ஆர்வத்துடன் இருந்த மாணவர்கள், செல்போன் வாங்க முடியாமலும், ஆன்லைன் வகுப்புகள் புரியாமலும் தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் அனுபவித்த உளவியல் ரீதியான துன்பத்துக்கும், மரணத்துக்கும் இந்த அரசு பொறுப்பேற்றுக்கொள்ளுமா? ஜனவரி மாத இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களும் பள்ளிக்குச் செல்ல தொடங்கிவிட்ட நிலையில், கல்வியாளர்கள், அதிகாரிகள், ஆசிரியர்களுடன் கலந்து ஆலோசித்து தேர்வை நடத்தும் வழிமுறைகளை அரசு வகுத்திருக்க வேண்டும். ஆனால், அனைவருடனும் ஆலோசனை நடத்திவிட்டோம், மாணவர்களின் சுமையை அறிந்துள்ளோம்.

ஒரு தலைமுறையையே பாழாக்கிய எடப்பாடி அரசு.. செல்லாகாசாகும் கல்வி.. குழப்பத்தில் மாணவர்களின் எதிர்காலம்!

எனவே தேர்வுகளை ரத்து செய்கிறோம் என்று முடிவு எடுத்திருப்பது கேலிக்கூத்தானது. சி.பி.எஸ்.இ. பள்ளியில் 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் நடத்தப்படுகிறது. அதுபோன்று தமிழக அரசும் நடத்தியிருக்கலாம். ஆனால் தேர்வின்றி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புக்கு செல்லும் போது பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மேலும் ஆசிரியர்களுக்கும் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வைத்து 80 சதவீதமும், வருகை பதிவேட்டை வைத்து 20 சதவீத மதிப்பெண்கள் வழங்குவது குளறுபடிகளைத் தான் ஏற்படுத்தும். தேர்வு என்பது பள்ளிக் கல்வி செயல்பாட்டில் ஒரு முக்கிய செயல்பாடு. அதைக் சீர்குலைப்பது மொத்த செயல்பாடுகளையும் பாதிக்கும். பத்தாம் வகுப்பு மாணவர்கள் எந்த அடிப்படையில் உயர் படிப்புகளுக்கான குரூப்பைத் தேர்வு செய்வார்கள்? என்ற கேள்வியையும் கல்வியாளர்கள் எழுப்புகின்றனர். கடந்த ஆண்டும் தேர்வின்றி மாணவர்கள் பாஸ் செய்யப்பட்டுவிட்டனர்.

செல்லாக்காசாகிவிட்டது கல்வி!

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகையில், பள்ளிகளில் 9,10 மற்றும் பிளஸ்1 வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்துள்ள நிலையில், மதிப்பெண் பட்டியல்கள் எப்படி வழங்குவது என்பது குறித்து இதுவரை வழிகாட்டு நெறிமுறைகளை இன்னும் தயார் செய்யவில்லை.

அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்த பிறகு மதிப்பெண் பட்டியலில் பாடங்கள் வாரியாக மதிப்பெண் எப்படி குறிப்பிடப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. 9ஆம் வகுப்பு மாணவர்கள் பத்தாம் வகுப்புக்குச் சென்று விடுவார்கள். பிளஸ் 1 மாணவர்கள் பிளஸ் 2 வகுப்புக்குச் சென்று விடுவார்கள். ஆனால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் நிலைதான் கவலையாக இருக்கிறது. அவர்கள் வேறு பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர முயன்றாலும், அல்லது பத்தாம் வகுப்புடன் படிப்பை முடித்துக் கொண்டால், அவர்கள் சான்றிதழில் அவரின் தேர்ச்சி நிலை மதிப்பெண் அடிப்படையில் குறிப்பிடப்படுமா என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு பிளஸ் 1 வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் அறிவியல், கணக்குப் பாடங்களை முதன்மையாகக் கொண்ட குரூப் எடுக்க விரும்பினால் எந்த அடிப்படையில் அவர்களுக்கு குரூப் ஒதுக்குவார்கள் என்பதும் கேள்வியாக இருக்கிறது.

மாணவர்கள் விருப்பத்தின் பேரில் ஒதுக்கப்படுமா அல்லது பள்ளித் தலைமை ஆசிரியர்களின் விருப்பப்படி, ஒதுக்கப்படுமா என்பதும் கேள்வியாக இருக்கிறது. அப்படி தலைமை ஆசிரியர்கள் ஒதுக்கும் போது, அந்தந்த பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை, அருகாமையில் உள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை, இட ஒதுக்கீடு அடிப்படையில் முன்னுரிமை ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். அது நடக்குமா என்பது சந்தேகம்தான். தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என்று அறிவித்துள்ளதை பார்க்கும் போது, தேசிய கல்விக் கொள்கையில் 2020ம் அம்சத்தில் கூறப்பட்டுள்ள படி, பள்ளிப்படிப்பை செல்லாக்காசாக மாற்றும் முயற்சிக்கு இந்த அறிவிப்பு துணைபோவதாகத் தெரிகிறது. ஏனென்றால், அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் மதிப்பெண் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை என்றார்.

இனிதான் இருக்கு!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாமல் பாஸ் செய்யப்பட்ட மாணவர்கள், தொழிற்படிப்புகளான ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் ஆகியவற்றில் டிப்ளமோ படிப்பில் சேர மதிப்பெண்கள் அடிப்படையில்தான் முன்னுரிமை வழங்கப்படும். தற்போது இந்த தொழிற்பயிற்சி கல்லூரிகள் மாணவர்களை எந்த அடிப்படையில் சேர்ப்பது என்ற நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இது ஒருபுறம் என்றால், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்று ராணுவம், போலீஸ், அஞ்சல்துறை உள்பட பல்வேறு அரசுத் துறையில் வேலைவாய்ப்பும் உண்டு.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களை எப்படி தகுதி பார்த்து தேர்வு செய்வார்கள். கொரோனா காலகட்டத்தில் அரசே பார்த்து போனா போகுது என்று பாஸ் செய்யப்பட்ட மாணவர்கள் இவர்கள் என்று சான்றிதழை பார்த்ததும் கணித்து விடுவார்கள். அப்போது அந்த மாணவனுக்கு வேலை வாய்ப்பிலும் பின்னடைவு தான் ஏற்படும். இப்போது நிம்மதி பெருமூச்சு விடும் மாணவர்கள் எதிர்காலத்தில் இப்படி ஒரு பிரச்சினையையும் சந்திக்க நேரிடலாம்.

ஒரு தலைமுறையையே பாழாக்கிய எடப்பாடி அரசு.. செல்லாகாசாகும் கல்வி.. குழப்பத்தில் மாணவர்களின் எதிர்காலம்!

ஒரு தலைமுறை பாழ்!

கொரோனா தொற்று ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்ட போதும், மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளிகள் திறந்தபோதும் பள்ளி கல்வித்துறை பொறுப்பை வகித்த அமைச்சர் செங்கோட்டையன், எந்த திட்டமிடலும் இல்லாமல் செயலற்று இருந்தது அனைவரையும் அதிருப்திக்குள்ளாக்கியது. ஆரம்பக் கல்வியை மட்டுமே அமைச்சர் படித்திருப்பதாலோ என்னவோ கல்வியின் அருமை பற்றி தெரியாமல், மாணவர்களின் நலன் கருதாமல் மேம்போக்காக தனது காலத்தை கடத்திவிட்டார்.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் கொரோனா காலத்திலேயே முறையாகத் திட்டமிட்டு பொதுத்தேர்வை நடத்திய முறையை தமிழக அமைச்சரும் கடைப்பிடித்திருந்தால் மாணவர்கள் தற்போது தைரியமுடன் இருந்திருப்பார்கள். ஆனால் தான் பொறுப்பு வகிக்கும் துறையில் எந்த கவனமும் செலுத்தாத அமைச்சரால் ஒரு தலைமுறையே பாழாகிவிட்டது என்று சமூக ஆர்வலர்கள் புலம்புகிறார்கள்.

நன்றி - தினகரன் நாளேடு

banner

Related Stories

Related Stories