தமிழ்நாடு

’நேர்மையாக இருந்தால் சாக வேண்டியதுதான்’ : உயரதிகாரிகளின் அலட்சியத்தால் பலியான வனக்காப்பாளர்

அந்தியூரில் வனக்காப்பாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’நேர்மையாக இருந்தால் சாக வேண்டியதுதான்’ : உயரதிகாரிகளின் அலட்சியத்தால் பலியான வனக்காப்பாளர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் அன்பன். இவர், சத்தியமங்கலம் வனத்துறையில் பணியாற்றினார். 2015ம் ஆண்டு பணியின் போது அன்பன் உயிரிழந்தார். இதையடுத்து, வாரிசு அடிப்படையில் அவரது மகன் பிரபாகரனுக்கு 2016ம் ஆண்டு வனக்காப்பாளர் பணி கிடைத்தது.

இதையடுத்து, அந்தியூர் வனச்சரகம், கொம்புத்தூக்கி மாரியம்மன் வனப்பகுதியில் வனக்காப்பாளராக பிரபாகரன் 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். பின்னர் சென்னம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட கொமராயனூர் தண்டா பகுதியில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து பிரபாகரன், தாய் ராஜம்மாளுடன் அந்தியூர் அருகே காட்டூர் பகுதியில் வசித்து வந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான பிரபாகரனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களாக பணிக்கு செல்லாமல் விடுப்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில், கொம்புத்தூக்கி அம்மன் கோவில் வனப்பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பிரபாகரன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பர்கூர் போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் பிரபாகரன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இதில் பிரபாகரன் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

’நேர்மையாக இருந்தால் சாக வேண்டியதுதான்’ : உயரதிகாரிகளின் அலட்சியத்தால் பலியான வனக்காப்பாளர்

இந்நிலையில், இறப்பதற்கு முன்னதாக பிரபாகரன் செல்போனில் பதிவு செய்த வீடியோவை, அவரது சகோதரி ஜெயப்பிரபா, நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். அந்த வீடியோவில், "வனக்காப்பாளர்களின் மனநிலையை யாரும் புரிந்து கொள்வதில்லை. நேர்மையாக வேலை செய்தால் யாரும் மதிப்பதில்லை. இங்கு காசுதான். இல்லையெனில், ஒண்ணும் பண்ண முடியாது. அதிகாரிகளுக்கு ஜால்ரா போட்டால் தப்பிக்கலாம்.

பணம் மட்டுமே வனத்துறையின் நோக்கமாக உள்ளது. எம்.பி.ஏ. படிச்சுட்டு சாதிக்கணும்னு வந்து ஒண்ணும் பண்ண முடியல. அலுவலர்கள் யாரும் மதிப்பதில்லை. கேவலமாக பாக்குறாங்க. வனத்துறை காசுக்கு அடிக்ட். நான் மதுவுக்கு அடிக்ட். என்னை யாரும் காப்பாற்ற முடியாது"என கூறிவிட்டு தற்கொலை செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories