தமிழ்நாடு

“தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டவே மினி கிளினிக்குகளில் அவுட் சோர்சிங் முறை” : வேல்முருகன் சாடல்!

மினி கிளினிக்குகளில் அவுட் சோர்சிங் முறை என்பது முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்கள் இலாபம் ஈட்டவே கொண்டு வரப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

“தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டவே மினி கிளினிக்குகளில் அவுட் சோர்சிங் முறை” :  வேல்முருகன் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மினி கிளினிக்குகளில் தனியார் நிறுவனத்தின் மூலம் செவிலியர்களை நியமிக்கும் நடவடிக்கையை, அ.தி.மு.க அரசு கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், அதனை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இரண்டாயிரம் மினி கிளினிக் தொடங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு வரவேற்கதக்கது. அதே நேரத்தில், 2,000 மினி கிளினிக்கிற்கு, அவுட் சோர்சிங் முறையில் செவிலியர்களை நியமனம் செய்ய அ.தி.மு.க அரசு முடிவெடுத்திருப்பது கண்டனத்துக்குரியது.

அதாவது, 2,000 மினி கிளினிக்குகளில் செவிலியர்களுக்கான பணியிடங்கள், தனியார் நிறுவனத்தின் மூலம் நியமிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக, காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஆயிரக்கணக்கான செவிலியர்கள் பாதிக்கப்படுவார்கள்.

“தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டவே மினி கிளினிக்குகளில் அவுட் சோர்சிங் முறை” :  வேல்முருகன் சாடல்!

ஆனால், அந்த அரசாணை இன்று வரை நிறைவேற்றப்படாமல், செவிலியர்கள் ஒப்பந்த முறையிலேயே வைக்கப்பட்டுள்ளனர். அந்த செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைக்கு அ.தி.மு.க அரசு கொஞ்சம் கூட செவி சாய்க்கவில்லை.

குறிப்பாக, பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 2017ஆம் ஆண்டு செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை கலைக்க அ.தி.மு.க அரசும், காவல்துறையும் என்னவெல்லாம் சதித்திட்டம் தீட்டினர் என்பதை நாம் அறிந்ததே.

தற்போது, மினி கிளினிக்கிற்கு தனியார் நிறுவனத்தின் மூலம் செவிலியர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியிடங்களுக்கு, ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை விலை பேசி அந்த பணியிடங்களை விற்பதாக புகார் எழுந்துள்ளது.

“தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டவே மினி கிளினிக்குகளில் அவுட் சோர்சிங் முறை” :  வேல்முருகன் சாடல்!

இதன் காரணமாக, தகுதியற்றவர்கள் நியமிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, இந்த அவுட் சோர்சிங் முறை என்பது முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்கள் இலாபம் ஈட்டவே கொண்டு வரப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தப் பணியிடங்கள் மார்ச் 2021 வரை என்று அரசாணை மூலமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மினி கிளினிக் என்பது தேர்தலுக்காக, வாக்கு அரசியலுக்காக கொண்டு வரப்பட்டது என்பதை நமக்கு உணர்த்துகிறது. அரசு மருத்துவமனைகளில், அவுட் சோர்சிங் முறையில் மருத்துவர்கள் நியமனம் மேற்கொள்ளக்கூடாது என்ற உயர்நீதிமன்ற மதுரைகிளையின் உத்தரவை அ.தி.மு.க அரசுக்கு இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனவே, மினி கிளினிக்குகளில் தனியார் நிறுவனத்தின் மூலம் செவிலியர்களை நியமிக்கும் நடவடிக்கையை, அ.தி.மு.க அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

“தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டவே மினி கிளினிக்குகளில் அவுட் சோர்சிங் முறை” :  வேல்முருகன் சாடல்!

அதுமட்டுமின்றி, அ.தி.மு.க அரசு அறிவித்தபடி 2,000 மினி கிளினிக்குகளில், புதிய மருத்துவர்களையும், செவிலியர்களையும், மருத்துவமனைப் பணியாளர்களையும், மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் உடனடியாக நியமிக்க வேண்டும்.

2018 மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்போர் பட்டியலில் உள்ள மருத்துவர்களை, மினி கிளினிக்குகளில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பேரிடர், புயல், மழை, வெள்ளக் காலங்களில், ராணுவ வீரர்கள் போன்று நின்று, மக்களை பாதுகாத்த செவிலியர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories