தமிழ்நாடு

“அதிமுகவை நிராகரிப்போம் எனத் தமிழகம் தயாராகிவிட்டது; தமிழகம் மீளும்”: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!

“அ.தி.மு.க.வை நிராகரிப்போம் (#WeRejectADMK) எனத் தமிழகம் தயாராகிவிட்டது. கலந்துகொண்ட ஒவ்வொருவரின் ஆதரவிலும் இதைப் புரிந்துகொள்ள முடிகிறது” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“அதிமுகவை நிராகரிப்போம் எனத் தமிழகம் தயாராகிவிட்டது; தமிழகம் மீளும்”: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று (23-12-2020) காலை, காஞ்சிபுரம் மாவட்டம் - திருப்பெரும்புதூர் தொகுதியில் உள்ள குன்னம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

அதுபோது, தமிழகத்தைக் கடந்த பத்து ஆண்டுகளாகச் சீரழித்த அ.தி.மு.க. அரசின் ஊழல்களைப் பட்டியலிட்டுக் குற்றப்பத்திரிகையைப் பொதுமக்களிடம் வழங்கினார். பின்னர், கிராமசபைக் கூட்டத்தில் அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்துத் தனது முகநூல் பக்கத்தில்தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “பத்து நாட்களில் 16,500 கிராமங்களில் கிராமசபை/வார்டு கூட்டங்களை திமுக நடத்துகிறது. இன்று, திருப்பெரும்புதூர் தொகுதியின் குன்னம் ஊராட்சியில் கலந்து கொண்டேன்!

அ.தி.மு.க.வை நிராகரிப்போம் (#WeRejectADMK) எனத் தமிழகம் தயாராகிவிட்டது. கலந்துகொண்ட ஒவ்வொருவரின் ஆதரவிலும் இதைப் புரிந்துகொள்ள முடிகிறது! தமிழகம் மீளும்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories