தமிழ்நாடு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 97.67 லட்சத்தை கடந்தது - பலி எண்ணிக்கை 1.41 லட்சமாக உயர்வு ! #COVID19

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 31,522 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 97,67,372 ஆக உயர்ந்திருக்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 97.67 லட்சத்தை கடந்தது - பலி எண்ணிக்கை 1.41 லட்சமாக உயர்வு ! #COVID19
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 31,522 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 97,67,372 ஆக உயர்ந்திருக்கிறது.

ஒரே நாளில் 412 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 1,41,772 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். மேலும், ஒரே நாளில் 37,725 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 92,53,306 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, 3,72,293 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories