தமிழ்நாடு

“தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பதிவாகும் பலி எண்ணிக்கை” : மொத்த பாதிப்பு 7,90,240 ஆக உயர்வு! #COVID19

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,90,240 ஆக உயர்ந்துள்ளது.

“தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பதிவாகும் பலி எண்ணிக்கை” : மொத்த பாதிப்பு 7,90,240 ஆக உயர்வு! #COVID19
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 1,320 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,90,240 ஆக உயர்ந்துள்ளது.

அதேப்போல், இன்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 11,793 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 70,765 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,24,76,093 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இன்று சென்னையில் 346 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,17,542 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா குணமடைந்து 1,398 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 7,67,659 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் 10,938 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories