தமிழ்நாடு

“உயரதிகாரி என ஏமாற்றி ஊர்சுற்றும் மோசடி பேர்வழி” - மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை பார்வையிட்டபோது கைது!

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை ஆய்வு செய்ய வந்ததாகக் கூறி மோசடி செய்த போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார்.

“உயரதிகாரி என ஏமாற்றி ஊர்சுற்றும் மோசடி பேர்வழி” - மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை பார்வையிட்டபோது கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சோமசுந்தரம் என்பவருக்கு தொலைபேசி வாயிலாக அழைத்த மர்ம நபர், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பிரிவிலிருந்து பேசுவதாகவும் தான் ஐ.ஏ.எஸ் அதிகாரி செந்தில்குமார் என்றும் கூறி அறிமுகம் செய்துகொண்டு, மதுரைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

இதனை நம்பிய உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி, அவரை காரில் அழைத்துக் கொண்டு மதுரை மாநகரின் பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் செந்தில்குமாரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சோமசுந்தரம் சென்னையில் உள்ள சுகாதாரத்துறை செயலருக்கு இவருடைய புகைப்படத்தை அனுப்பி சோதனை செய்தபோது இவர் போலி என்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக தல்லாகுளம் காவல்துறையினருக்கு அளித்த புகாரை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் செந்தில்குமார் என்பதும் இவர் மருத்துவ படிப்பை முழுமையாக முடிக்காமல் ஊர் சுற்றி வந்ததும் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு அவ்வபோது உயரதிகாரி எனக் கூறி ஒவ்வொரு துறை அதிகாரிகளைச் சந்தித்து ஊர் சுற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த தல்லாகுளம் காவல்துறையினர் அவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories