தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை தகவல்

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை தகவல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை (13.10.2020) அதிகாலை காக்கிநாடா அருகே கரையை கடக்கக்கூடும்.

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை தகவல்

இதன் காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், மேலும் சென்னை, காஞ்சிபுரம் கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாபலிபுரம் (செங்கல்பட்டு), பெரியாறு (தேனி), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) தலா 3 செமீ , சின்னக்கல்லார் (கோவை), காஞ்சிபுரம், உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), சோளிங்கர் (ராணிப்பேட்டை ) தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை - சென்னை வானிலை தகவல்

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, மற்றும் ஆந்திரா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55-65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் வட மேற்கு, தென் மேற்கு வங்கக் கடல் பகுதி, மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50-60 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரித்துள்ளது.

அக்டோபர் 12, 13 குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும், மேலும் கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று கூறியுள்ளது.

மேலும் அக்டோபர் 13 முதல் 15 வரை அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுள்ளது.

banner

Related Stories

Related Stories