தமிழ்நாடு

வேளாண் மசோதா பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மழுப்பிய விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு!

மோடி அரசு கொண்டு வந்துள்ள விவசாய மசோதா குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய எந்த ஒரு கேள்விக்கும் பதில் அளிக்காமல் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேளாண் மசோதா பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் மழுப்பிய விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதா மூலம் விவசாயிகளுக்கு அடிப்படை ஆதார விலை கிடைக்குமா? பெரிய நிறுவனங்கள் உள்ளே நுழைந்தால் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் இருக்குமா? என செய்தியாளர்களின் எந்த ஒரு கேள்விக்கும் பதில் அளிக்காமல் சென்றிருக்கிறார் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு.

சென்னை தலைமை செயலகத்தில் வேளாண் மசோதா குறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய வேளாண் துறை அமைச்சர், "தமிழகத்திற்கு நன்மை பயக்கும் சட்டம். விவசாயிகளின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காகவே முதல்வர் ஆதரவு தெரிவித்தார் . தமிழக அரசு இதுகுறித்து சொன்னால் மக்கள் நம்ப மாட்டார்கள். பத்திரிகை துறை சார்ந்தவர்கள் சொன்னால் மட்டுமே நம்புவார்கள்" என அமைச்சர் அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என ஒப்புதல் வாக்குமூலமாகத் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க சார்பில் நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாவிற்கு எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் விளக்கம் தான் அளித்தார் என்று மழுப்பலான பதிலை மட்டுமே அமைச்சர் தெரிவித்தார். இந்த மசோதா மூலம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கலுக்கு வழிவகை செய்யும் என்ற கேள்விக்கு அமைச்சர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பேசுகையில், மத்திய அரசு கொண்டு வரக்கூடிய வேளாண் சட்டம் ஏற்கனவே தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது எனவும் கூறினார்.

ஏற்கனவே மாநில அரசு செயல்படுத்தி வருவதாக இருந்தால் பின் ஏன் மத்திய அரசு மசோதாவை கடைபிடிக்க வேண்டும், இது மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயலுக்கு தமிழக அரசு துணை போவதாக இல்லையா என்ற கேள்விக்கு வேளாண் துறை அமைச்சரும் செயலாளரும் எந்த பதிலும் தெரிவிக்காமல் சென்றிருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories