தமிழ்நாடு

நகரத்தில் வேலைவாய்ப்பு; சிறுதொழில் கடன் உத்தரவாத திட்டத்தை ஏற்படுத்துக -அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை

கடன் சுமை அதிகரித்தாலும் 5 ஆயிரம் கோடி ரூபாய் மருத்துவ செலவு செய்யவேண்டும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில் வலியுறுத்தியுள்ளார்.

நகரத்தில் வேலைவாய்ப்பு; சிறுதொழில் கடன் உத்தரவாத திட்டத்தை ஏற்படுத்துக -அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையிலான உயர்மட்டக் குழு சந்தித்தது.

அப்போது, 275 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அக்குழு தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரங்கராஜன் பல்வேறு பரிந்துரைகளை செய்துள்ளதாக தெரிவித்தார். இந்த அறிக்கை தொடர்பாக அரசு பரிசீனை செய்து நடடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார். முக்கியமாக இரண்டு பிரிவுகளில் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. அதாவது, நிவாரணம், புதுப்பித்தல் மற்றும் குறுகிய காலத்தில் செய்யவேண்டியது என்று அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.

கொரோனா பாதிப்பால் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ளது. முழு அடைப்பில் இருந்து விடுபட்டால்தான் வளர்ச்சி அதிகமாகும். தொற்று பரவாமல் இருக்க வேறு காரணங்களையும் செய்யவேண்டும். இந்த கொரோனா பாதிப்பில் இருந்து எவ்வளவு சீக்கிரம் வெளியே வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியே வந்தால் பொருளாதாரம் மேம்படும் என்றார்.

நகரத்தில் வேலைவாய்ப்பு; சிறுதொழில் கடன் உத்தரவாத திட்டத்தை ஏற்படுத்துக -அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை

குழு கணிப்பின்படி 2020-21 இல் வளர்ச்சி 1.71 சதவிகிதமாக இருக்கும். மற்றொரு கணக்கின்படி பார்த்தால் சரிவு இருக்கும் என்றும் ரங்கராஜன் தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதார வளர்ச்சி நிலை இப்போது எந்த அளவு இருக்கும் என்று சொல்வது கடினம் என்றும் கூறினார்.

அதே போல பொருளாதார வளர்ச்சி தொடர்பாக சில அறிகுறிகள் இருக்கிறது. அதாவது ஜிஎஸ்டி வரி வசூல், பெட்ரோல் வரி, மின்சாரம் உபயோகம் போன்றவற்றால் கொரோனாவிற்கு முன் இருந்த நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்.

அடுத்த 2 மாதங்களில் இயல்பு நிலைக்கு வரலாம் என்று தோன்றுகிறது என்றார். வரி உயர்த்தப்படுமா என்று கேள்விக்கு, செலவு அதிகரிக்கும் போது வரி விகிதத்தை மாற்றும் நிலை ஏற்படும். ஆனால் தற்போது வரி உயர்த்துவதற்கு வழி இல்லை, வரியை குறைக்கதான் சொல்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

முக்கியமான பரிந்துரைகளாக அவர் தெரிவித்தது:

1. மக்களுக்கு நவம்பர் மாதம் வரை அதிகப்படியாக அரிசி கொடுக்கப்படவுள்ளது. அதை இந்தாண்டு வரை நீட்டிக்கவேண்டும்.

2. வேலை வாய்ப்பை அதிகரிக்கும் விதமாக கிராமப்புறத்தில் உழைப்புக்கு உத்தரவாதம் கொடுக்கும் திட்டம் இருக்கிறது. அதே போல நகர்புறத்திலும் ஏற்படுத்தலாம்.

நகரத்தில் வேலைவாய்ப்பு; சிறுதொழில் கடன் உத்தரவாத திட்டத்தை ஏற்படுத்துக -அரசுக்கு ரங்கராஜன் குழு பரிந்துரை

3. கொரோனா நிவாரண உதவியாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பாகவும் பரிந்துரை செய்துள்ளோம். அரசுதான் முடிவு செய்யவேண்டும்.

4. கட்டுமான பணியாளர்கள் தொடர்பான நிதி 3200 கோடி உள்ளது . அதை உடனே பயன்படுத்தவேண்டும்.

5. மூலதன செலவு தொடர்பாக நிதிநிலையில் தெரிவித்ததை விட 10 ஆயிரம் கோடி செலவழிக்க சொல்லியுள்ளோம்.

6. தொழில் வளர்ச்சிக்கு மூலதனத்தை ஆயிரம் கோடியாக உயர்த்தவும், தொழில் பூங்காக்களை உண்டாக்கி சிறுதொழிலுக்கு ஒரு பங்கை தரவேண்டும்

7. சிறு தொழிலுக்கு கடன் உத்தரவாத திட்டத்தை உருவாக்கவேண்டும்.

வருமானம் குறைந்துள்ளது. அதேபோல மருத்துவ செலவும் அதிகரித்துள்ளது. இதனால் நிதிப்பற்றாக்குறை ஏற்படதான்செய்யும். ஆயினும் இன்னும் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்க வேண்டி இருக்கும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதனால் வருவாய் பற்றாக்குறை அதிகமாக தான் இருக்கும். மத்திய அரசிடம் இருந்து நிலுவையில் உள்ள தொகையை பெறுவது தொடர்பாக பரிந்துரை செய்துள்ளோம். நீண்ட கால நோக்கில் பொருளாதாரம் மேம்படுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் எங்கள் பரிந்துரைகள் உள்ளதாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories