தமிழ்நாடு

முருகனும், நளினியும் அமெரிக்க தேர்தல் பற்றியா பேச போகிறார்கள்? என்னதான் பிரச்னை? -அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

ராஜிவ் காந்தி கொலை வழக்குக்காக அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை தற்போதும் செயல்பாட்டில் உள்ளதா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

முருகனும், நளினியும் அமெரிக்க தேர்தல் பற்றியா பேச போகிறார்கள்? என்னதான் பிரச்னை? -அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்பது குறித்து ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி மற்றும் முருகன் ஆகியோரை லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் உள்ள முருகனின் தாயுடனும் வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் பேச அனுமதி கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன், வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் இருவரையும் பேச அனுமதித்தால், ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் பன்முக விசாரணை முகமையின் விசாரணை பாதிக்கும் என தெரிவித்தார்.

முருகனும், நளினியும் அமெரிக்க தேர்தல் பற்றியா பேச போகிறார்கள்? என்னதான் பிரச்னை? -அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

இதை ஏற்க மறுத்த நீதிபதி கிருபாகரன், முருகனின் தந்தை இறப்பு குறித்து தான் இருவரும் பேச போகிறார்களே தவிர அமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா பேச போகிறார்கள் என அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், இருபது ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2015 ஆம் ஆண்டு வரை மட்டுமே அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை தற்போதும் செயல்பாட்டில் உள்ளதா? அல்லது விசாரணைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

banner

Related Stories

Related Stories