தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழையும், 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தர்மபுரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை, ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் வடதமிழக மாவட்டங்கள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியான செங்கல்பட்டு மாவட்டம் செய்யார், நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு, திருப்பூண்டி ஆகிய பகுதிகளில் தலா 10 சென்டி மீட்டர் மழையும், திருவள்ளூர் தாமரைப்பாக்கம், காஞ்சிபுரம் கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 9 சென்டிமீட்டர் மழையும், செங்கல்பட்டு தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம், சேலம் ஆத்தூர், நீலகிரி தேவலா தலா 8 சென்டி மீட்டர் மழையும், திருவள்ளூர், அம்பத்தூர், நாகப்பட்டினம் வேதாரண்யம், திருவாரூர் திருத்துறைப்பூண்டியில் தலா 7 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

அடுத்த 2 தினங்களுக்கு சூறாவளி மற்றும் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்ததில் தமிழக கடலோர பகுதி, மற்றும் குமரி கடல் பகுதியில் வீசக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கு மன்னார் வளைகுடா, கடலோர கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் அலை முன்னறிவிப்பு

சென்னை தமிழக கடலோரப் பகுதிகளில் தொழிற்சாலை முதல் தனுஷ்கோடி வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலலை 3.0 முதல் 4.3 மீட்டர் வரை எழும்பக் கூடும்.

banner

Related Stories

Related Stories