தமிழ்நாடு

“தென்மேற்கு பருவக்காற்று எதிரொலி : நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு” - தமிழக வானிலை அப்டேட்!

ஜூன் 22ம் தேதி வரை மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“தென்மேற்கு பருவக்காற்று எதிரொலி : நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு” - தமிழக வானிலை அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்றில் ஏற்பட்டுள்ள திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா மற்றும் பந்தலூரில் தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தென்மேற்கு பருவக்காற்று எதிரொலி : நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு” - தமிழக வானிலை அப்டேட்!

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு வடக்கு அரபிக்கடல் குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகளுக்கும், கர்நாடகா, கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மத்திய கிழக்கு அரபிக்கடலில் லட்சத்தீவு பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் வருகிற 22-ஆம் தேதி வரை தென்மேற்கு மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories