தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :
தமிழகத்தில் இன்று மேலும் 1,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 30 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 36,841 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டுமே இன்று 1,392 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 25,937 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஒரே நாளில் 17,675 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று வரை ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 6,38,846 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இன்று ஒரே நாளில் 1,008 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 19,333 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 17,179 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று 19 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். சென்னையில் 16 பேர், செங்கல்பட்டில் 3 பேர் என இன்று 19 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது.