தமிழ்நாடு

“வெறும் வாய் வார்த்தைகளால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியாது” : முதல்வர் எடப்பாடிக்கு குவியும் அட்வைஸ்!

கொரோனா விவகாரத்தில், “அதிகாரிகள் மாறி மாறி அறிக்கை விட்டு மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்” விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

“வெறும் வாய் வார்த்தைகளால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியாது” : முதல்வர் எடப்பாடிக்கு குவியும் அட்வைஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா நோய்த்தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

செவ்வாயன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,901 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டும் இதில் 809 பேர் என்பது அதிர்ச்சியளிக்கிறது. மேலும் அதில் உயிரிழந்த 13 பேரில் 12 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

தலைநகர் சென்னையிலும் அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,308 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 1,025 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 நாட்களாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிய நிலையிலேயே உள்ளது.

“வெறும் வாய் வார்த்தைகளால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியாது” : முதல்வர் எடப்பாடிக்கு குவியும் அட்வைஸ்!

இதுபலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “ஆய்வுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் குணமடைந்துள்ளனர் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையில் ஒரே நாளில் 12 பேர் பலியாகி உள்ள நிலையில் தமிழகத்தில் உயிரிழப்பு மிக மிகக் குறைவாக 0.80 சதவீதம்தான் என்று அவர் புள்ளிவிபரக் கணக்கை எடுத்து நீட்டியுள்ளார்.

நான்குகட்ட ஊரடங்கு முடிந்த நிலையில் 5வது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் சில தளர்வுகள் தேவையானவை என்றபோதும், தொற்று பரவுவதற்கு மக்களையே குற்றம்சாட்டும் வகையில்தான் முதல்வரின் பேச்சும், அரசின் நடவடிக்கைகளும் அமைந் துள்ளன. தனிமனித இடைவெளியை பின்பற்றுங்கள், கைகளைக் கழுவுங்கள், முகக் கவசம் அணிந்து கொள்ளுங்கள் என்று கூறுவதால் மட்டும் நோய்த்தொற்றை தடுத்துவிட முடியாது.

பரிசோதனைகள் அதிக அளவில் செய்யப் பட வேண்டும், குறிப்பாக வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருப வர்களுக்கு முழுமையான சோதனை செய்யப் படவேண்டும். தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும்.

முழுமையாக ஈடுபட்டுள்ள நிலையில் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் விலகியே நிற்கின்றன. தனியார் மருத்துவமனைகளும் பரிசோதனை மற்றும் சிகிச்சையில் முழுமையாக ஈடுபடுத்தப்பட வேண்டும்.

அதே நேரத்தில் அவர்கள் வரம்பின்றி கொள்ளையடிப்பதை அனுமதிக்கக் கூடாது. நோய்த்தொற்று அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படும் நிலையில், படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், மருந்துகள் போதுமான அளவில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். நிலைமையின் தீவிரத்தை உணராமல் வெறும் வாய் வார்த்தைகளால் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்திவிட முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “முதலமைச்சர் அவர்களே! சென்னையைக் காப்பாற்றுங்கள் சென்னையைக் காப்பாற்ற சிறப்பு நடவடிக்கை வேண்டும். அதிகாரிகள் மாறி மாறி அறிக்கை விட்டு மக்களின் உயிரோடு விளையாடவேண்டாம்.அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க மறுக்கிறார்கள் என செய்திகள் வந்தும் நடவடிக்கை எடுக்காதது வேதனையளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories