தமிழ்நாடு

அதி தீவிர புயலாகும் உம்ஃபன்.. சென்னை, டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை தகவல்!

உம்ஃபன் புயல் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதி தீவிர புயலாகும் உம்ஃபன்.. சென்னை, டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த உம்ஃபன் புயலானது, தெற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கே 660 கி.மீ தொலைவிலும், நாகைக்கு கிழக்கே 650 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இது நாளை ஒடிசா கடற்கரையை நோக்கி நகர்ந்து அதி தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு மேற்கு வங்க கடற்கரையை நோக்கி நகரும் என சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

புயலின் தீவிரம் காரணமாக தெற்கு வங்கக்கடல் பகுதியில் சுமார் 80-90 கி.மீ வேகத்திற்கு காற்று வீசும். அவ்வப்போது 110 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். ஆகவே மத்திய வங்கக் கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், உம்ஃபன் புயல் காரணமாக தமிழகத்தின் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழைக்கும், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், மேற்குத் தொடர்ச்சி பகுதிகளை ஒட்டிய கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றார்.

அதேபோல, சென்னையிலும் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories