தமிழ்நாடு

குடும்பத் தகராறில் கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிக் கொன்ற மனைவி!

சென்னையில் குடும்பத் தகராறில் கணவர் மீது மனைவி கொதிக்கும் எண்ணெய் ஊற்றியதில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

குடும்பத் தகராறில் கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிக் கொன்ற மனைவி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சென்னை திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் உபயதுல்லா (39). இவருக்கு மனைவி நஸ்ரின் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த 2 ம் தேதி அன்று கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நஸ்ரின் அடுப்பில் இருந்த சூடான எண்ணெய்யை கணவர் மீது ஊற்றியுள்ளார்.

குடும்பத் தகராறில் கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிக் கொன்ற மனைவி!

வலி தாங்க முடியாமல் அலறிய உபயதுல்லாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதையடுத்து காவல்துறையினர் நஸ்ரின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது. இதற்கிடையே, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த உபயதுல்லா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதனையடுத்து, இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றிய காவல்துறையினர் அவரது மனைவி நஸ்ரினிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories