தமிழ்நாடு

”நீங்க எல்லாம் ஆம்பளையா?": தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வத்தை அசிங்கப்படுத்திய ஆடிட்டர் குருமூர்த்தி!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்த ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

”நீங்க எல்லாம் ஆம்பளையா?": தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வத்தை அசிங்கப்படுத்திய ஆடிட்டர் குருமூர்த்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அ.தி.மு.க ஆட்சி குறித்தும், அக்கட்சித் தலைவர்கள் குறித்தும் ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவிக்கும் கருத்துகள் சர்ச்சையாகி வருகின்றன. அ.தி.மு.க ஆட்சியாளர்களை திறனற்றவர்கள் என்ற பொருளில் ‘Impotent' என அவர் கூற அதற்கு அ.தி.மு.க-வினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், நேற்று இரவு திருச்சியில் துக்ளக் இதழின் பொன்விழா சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய 'துக்ளக்’ ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

குருமூர்த்தி பேசும்போது, “சசிகலாவை முதல்வர் ஆக்குவதற்கான பணிகள் நடைபெற்றபோது ஓ.பன்னீர்செல்வம் என்னிடம் வந்தார். 'நீங்கள் எல்லாம் ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க?' என்று கேட்டேன். நான் கூறியதால்தான் ஓ.பன்னீர்செல்வம் சமாதியில் அமர்ந்து தியானம் செய்தார்.

அதன்பிறகுதான் தமிழகத்தில் காட்சிகள் மாறின. ஒரு மாற்றம் ஏற்பட்டது. பிரிந்த அ.தி.மு.க-வை ஒருங்கிணைத்தேன். எடப்பாடி பழனிசாமியின் இந்த ஆட்சி பாவமான, தவறான ஆட்சி என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை” எனத் தெரிவித்தார்.

ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சுக்கு அ.தி.மு.க அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தின் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தை குருமூர்த்தி தரக்குறைவாக பேசியது சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

banner

Related Stories

Related Stories